தந்தை தாக்கி 7 வயது மகள் பலி கம்பளையில் கோரச் சம்பவம்

கம்பளை வட்டதெனிய கோனதிகவத்தை ஓம்பரதீகவத்தைப் பகுதியில் நேற்றுக் காலை ஏழு வயதுடைய சிறுமி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை குறித்த சிறுமியின் தந்தையே புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதமொன்றினால் தாக்கி இந்தக் கொலை புரியப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தில் மற்றுமொரு சிறுமியும் சிறுவனும் உள்ளனர். எனினும், இவர்களின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் தந்தை தினமும் சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்வாரென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கடுகன்னாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *