ஜனாதிபதிக்கு நன்றி…- அனோமா பொன்சேகா

anoma-fonseka.jpgஇலங் கையில் 30 வருடகால தீவிரவாதத்தை முறியடித்த வெற்றி நாயகனுக்கு ஜனாதிபதி கொடுத்த பாரிய பரிசே கடூழிய சிறைதண்டனை எனவும், அதற்கு தான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், தீர்ப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றிகூறுவதாகவும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஜனாதிபதியின் சுயரூபம் நன்கு தெளிவாகியுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.  இந்த முடிவினால் தாம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்தும் போராடுவோம். இதுதான் ஆரம்பம் இந்த போராட்டத்தில் நாம் பின்வாங்கப்போவதில்லை.  உண்மையான இராணுவ வீரர்களிடம் இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என அனோமா பொன்சேகா தெரிவித்தார்

Show More
Leave a Reply to kamal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Kusumpu
    Kusumpu

    பொன்சேகா மாத்தையா! உதைத்தான் சொல்லுறது தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்று. இராணுவச்சட்டை போட்டாப்போலை சனத்தை அசட்சை செய்ய ஏலாது. நீங்கள் சொன்னது இப்பவும் நினைவிருக்குது ” நாங்கள் ஆள்பவர்கள் தருகிறதை வாங்கிக் கொண்டு சத்தம் போடாமல் இருக்கவேண்டும்” என்று வெறிபறக்கப் பேசினீயளெல்லே. புத்தபகவான் கண்ணை மூடி நிஸ்டையிலை இருக்கிறார் என்று நினைச்சுக் கொண்டு ஆடினீயள் இப்பவாவது விளங்குங்கோ புத்தபகவான் முழிச்சபடிதான் இருக்கிறார். தமிழர் கூத்தணி நீங்கள் சொன்னதை மறந்து போய் இருக்கலாம் நாங்கள் மறக்க மாட்டோம். உதைத்தான் சொல்லுறது அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். நாங்கள் தமிழர்கள் புத்தபகவானை முதன் முதலில் நம்பியவர்கள். புத்தபகவான் எம்மைக் கடசிவரையும் கைவிடமாட்டார்.

    Reply
  • kamal
    kamal

    //நாங்கள் தமிழர்கள் புத்தபகவானை முதன் முதலில் நம்பியவர்கள். புத்தபகவான் எம்மைக் கடசிவரையும் கைவிடமாட்டார்// ஒரு திருத்தம் குசும்போ

    புத்தபகவானை நம்பி அவருடன் கூட்டணி சேர்ந்துதான் நாங்கள் சீவக சிந்தாமணி மணிமேகலை நாம் தமிழிலேயே எழுதினோம் புத்தபகவானை முதன் முதலில் நம்பியவர்கள். புத்தபகவான் எம்மைக் கடசிவரையும் கைவிடமாட்டார்.

    அந்தநேரம் சம்பந்தர் அப்பர் சுந்தரர் போன்ற நாயன்மாருக்கு பச்சை மட்டையடி கொடுத்திருந்திருந்தால் நாங்கள் இப்பவும் பெளத்தர்களாகவே இருந்திருப்போம்.

    Reply
  • மாயா
    மாயா

    உலகின் சிறந்த தளபதி என்று புகழ்ந்தவர்களாலேயே சரத்துக்கு இந்த நிலையென்றால் , , கேபீக்கு எங்க இடம் ஒதுக்கி வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    //அந்தநேரம் சம்பந்தர் அப்பர் சுந்தரர் போன்ற நாயன்மாருக்கு பச்சை மட்டையடி கொடுத்திருந்திருந்தால் நாங்கள் இப்பவும் பெளத்தர்களாகவே இருந்திருப்போம்// நல்ல வேளை அல்லா அந்தப்பக்கம் வரவில்லைப்போல் இருக்கிறது: மட்டைக்கம் நோகாமல் மனிதருக்கும் நோகாமல் அடிக்கும் அடி ஒன்று இருக்காமே. கேள்விப்பட்டீர்களா கமல்

    Reply
  • நந்தா
    நந்தா

    //புத்தபகவானை நம்பி அவருடன் கூட்டணி சேர்ந்துதான் நாங்கள் சீவக சிந்தாமணி மணிமேகலை நாம் தமிழிலேயே எழுதினோம் புத்தபகவானை முதன் முதலில் நம்பியவர்கள். புத்தபகவான் எம்மைக் கடசிவரையும் கைவிடமாட்டார்.

    அந்தநேரம் சம்பந்தர் அப்பர் சுந்தரர் போன்ற நாயன்மாருக்கு பச்சை மட்டையடி கொடுத்திருந்திருந்தால் நாங்கள் இப்பவும் பெளத்தர்களாகவே இருந்திருப்போம்.//

    புத்த பகவானை “முதன் முதலில்நம்பியவர்கள்” யார்?

    புரியவில்லையே?

    Reply