உலக நாடுகளையே உலுக்கிய ஸ்ரீலங்கா அரசு அரங்கேற்றிய தமிழர் படுகொலைகள் பற்றிய தரவுகள் அடங்கிய “கறுப்பு யூலை – 83” நூல் வெளியீட்டு விழா ஸ்காபரோவில் இடம்பெற இருக்கிறது.
அப்பாவித் தமிழர்கள் உயிரோடு பெட்றோல் ஊற்றித் தீக்கிரையாக்கப்பட்டதும் கத்தி, வாள், கோடரி போன்றவற்றால் வெட்டிக் கொலை செய்ப்பட்டதும் தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டதும் ஆகிய தரவுகளுடன் “சுடரொளி” ஆசிரியர் ஐ. தி. சம்பந்தன் அவர்களால் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோகமான தரவுகளை இந்நூல் பதிவுசெய்துள்ளது.
பேரினவாத அரசின் பக்க பலத்துடன் பெரும்பான்மைச் சிங்கள இனம் தமிழர்கள்மீது காலத்திற்கு காலம் நிகழ்த்திவரும் இனப் படுகொலைகளை அம்பலப் படுத்தும் வரலாற்றுப் பதிவாக வெளிவந்திருக்கும் “கறுப்பு யூலை – 83” நூலின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் மேற்கொண்டுள்ளது.
500 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஆங்கிலம் – தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளது.
தேசியத்தை நேசிக்கும் உணர்வாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
இடம்: 733 Birchmount Road, Scarborough (Birchmount/Eglinton)
காலம் – ஒக்தோபர் 17 (ஞாயிறறுக்கிழமை) 2010
நேரம் – மாலை 6.00 மணி