வடக்கில் காணாமல் போன சிறுவர்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் காணாமல் போன சிறுவர் சிறுமிகளை தேடிக் கண்டுபிடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நலச்சேவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 639 சிறுவர் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நலச்சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் பலர் பெற்றோரை விட்டுப் பிரிந்தும் பெற்றோரை இழந்தும் உள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெற்றோர், உறவினர்களின் முறைப்பாடுகளை அடுத்து 13 சிறுவர்கள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *