விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளில் மேலும் 500 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.

due-00000.jpgபுனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மேலும் 500 பெண்கள் இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுவர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர  நேற்று தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடீவுற்ற நிலையில் 11,696  புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது. ஓகஸ்ட் மாதம் வரை இவர்களில் 4,485 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,881 ஆண்களும் 1,604 பெண்களும் அடங்குகின்றனர். இவ்வெண்ணிக்கையில் 594 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் பெண்கள் கணிசமான அளவில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், இம்மாத இறுதியில் 500 பெண்கள் விடுவிக்கப்பட்டால் 27 பெண்கள் மட்டுமே புனர்வாழ்வு முகாமில் எஞ்சியிருப்பர் எனவும் அவர் குறிப்பட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *