உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த தெல்லிப்பழை கிராமசேவகர் பிரிவுகளில் மக்களை மீன்குடியேற்றுவதற்கு வசதியாக வெடிபொருட்கள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை பிரதேசச் செயலர் பிரிவில் காங்கேசன் வீதியின் மேற்குப் புறமாகவுள்ள மாவிட்டபுரம் வரையிலான பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளின் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்தும் வகையில் துரிதமாக வெடிபொருட்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.