வடமராட்சியில் கசிப்பு தயாரித்த இரு பெண்களுக்கு அபாராதம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கசிப்பு  வைத்திருந்த இரு பெண்களுக்கு நீதிமன்றினால் அதிகூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைத் தெற்கில் சட்டவிரோதமாக, உடல் நலத்திற்கு கேடான கசிப்பு எனப்படும் கள்ளச் சாராயம் தயாரிக்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டு இதனைத் தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பெருமளவிலான உபகரணங்கள் மூலப்பொருட்கள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்டப்ட இரு பெண்களும் பருத்தித்துறை நீதவான் திருமதி றோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, அப்பெண்களில் ஒருவருக்கு ஐந்து இலட்ச ரூபா அபராதமும், அடுத்தவருக்கு மூன்று இலட்ச ரூபா அபராதமும் விதித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *