யாழ். மாவட்ட, வாக்காளர் இடாப்பு மீளாய்வின்போது தமது பெயரை வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்காமல் இருந்தால் அவர்களைப் பதிவு செய்ய மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பப்படிவங்கள் டிசம்பர் மாதம் விநியோகிக்கப்பட்டு ஜனவரி மாதம் வாக்காளர் இடாப்பில் சேர்க்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இப்பணி யாழ்.மாவட்டத்தில், 435 கிராம சேவையாளர் பிரிவிலும் கிளிநொச்சிமாவட்டத்தில் 96 கிராம சேவையாளர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மூலமான வாக்காளர் இடாப்பு மீளாய்வுப்பணி முடியும் தருவாயில் உள்ளது