இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த 28,473 குடும்பங்களில் 20,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ம் திகதி வரை இவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும் ஏனையவர்களும் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் எனவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.