போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு துரித கற்றல் செயல்திட்டம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக கல்வி வாய்ப்புக்களை இழந்த மாணவர்களுக்கு துரித கற்றல் செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், வடக்கு, கிழக்கு மாகாண கல்வித்திணைக்களங்கள், என்பன இணைந்து ‘யுனிசெவ்’ நிறுவனத்தின் அனுசரணையில் இச்செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.

இதில் தரம் 3முதல், தரம் 9 வரையுள்ள மாணவர்கள் பயன் பெறவுள்ளனர். தமிழ், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களும், தரம் 6 தொடக்கம் 9 வரையிலான மாணவர்களுக்கு விஞ்ஞான பாடமும் துரிதகற்றலாக கற்பிக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து இச்செயல்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *