கிழக்கில் வாழைச்சேனை வட்டவான் பிரதேசத்தில் மோட்டார் வெடிகுண்டுகள் பொலிஸாரினால் மீடக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி அப்பகுதி வெற்றுக் காணியொன்றில் புதைக்கபபட்டிருந்த இக்குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குண்டுகள் முன்னர் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு வேறு இடங்களில் இவ்வாறான குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளனவா எனவும் ஆராயப்பட்டு வருகின்றன.