மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளையும் அதன் உதிரிப்பாகங்களையும் சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கை பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். “தாம் எடுத்துச் செல்லும் பொருட்கள் தொடர்பான தகவல்களை சுங்க அதிகாரிகளுக்கு வழங்காது சந்தேக நபர் வெளியேற முயற்சி செய்தபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுங்க அதிகாரிகளுக்கு தாம் எடுத்துச் செல்லும் பொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்காது வெளியேறுவதை அவதானித்த சுங்கப் பிரதிப் பணிப்பாளர் லாலித வீரசிங்க குறித்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது கையடக்கத் தொலைபேசிகளும், அதன் உதிரிப்பாகங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. டுபாய் நாட்டிலிருந்து வருகை தந்த ‘மிஹின் லங்கா எம் ஜே 402’ என்ற விமானத்தில் பயணம் செய்து இந்நபர் நேற்று காலையில் காட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.
புத்தளம் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்நபர் அடிக்கடி டுபாய் நாட்டுக்குச் சென்று வந்துள்ளார் என்று சுங்க அதிகாரிகளின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்நபர் எடுத்து வந்த பொருட்களில் 125 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதற்குரிய உதிரிப்பாகங்கள் அடங்களான பல இலத்திரனியல் பொருட்கள் அடங்கியுள்ளன.