மாலை 5-6.30 மணிவரையே இனிமேல் யாழ். நூலகத்தைப் பார்வையிட முடியும்

யாழ்ப்பாண பொது நூலகத்தை பார்வையிடச் செல்வோர் இனிமேல் மாலை 5 மணிக்கும் 6.30 மணிக்கும் இடையிலேயே அங்கு செல்ல அனுமதிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 25 பேரடங்கிய குழுவினருக்கே அனுமதி வழங்கப்படும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நூலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. தலைமை நூலகர் மற்றும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.வட பகுதிக்கு வெளியே இருந்து நூலகத்துக்கு வருகைதரும் அதிக எண்ணிக்கையானோரால் ஊழியர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *