தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று செவ்வாய் கிழமை மாலை சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே சிவாஜிலிங்கம் கருத்தத் தெரிவிக்கையில், பத்து தமிழ் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று மாலை கூடி முக்கிய சில விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு வருகை தந்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ள நிலையில் அவருடன் தமிழ் கட்சிகளின் அரங்கம் மேற்கொள்ளவுள்ள பேச்சுக்கள் குறித்தும், தீர்வுத்திட்டம் ஒன்றை வடிவமைப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Selva
I am not that optimistic….but atleast come to a consensus in the interest of the Tamil people.
Selva