அம்பாந்தோட்டையில் இந்திய துணைத் தூதரகம்

hambantota.jpgஅம்பாந் தோட்டை புது வீதியில் நேற்று இந்திய துணைத் தூதரக அலுவலகம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இது வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவிருந்தது. சீரற்றகால நிலை காரணமாக இந்த திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ எஸ். எம். கிருஷ்ணாவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்,  இந்திய இலங்கைத் தூதுவர் அசோக் கே. காந்தா, இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    ஆகா இது எதோ ஊமை குத்துபோல் அல்லவா இருக்கு, நான் நினைக்கிறேன் இந்தியாவை இலங்கை மதிக்கவில்லை. அதனால் இந்தியா தனது சதிராட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டது; அமெரிக்கா சீனாவுக்கு சிவப்பு கொடியும் இந்தியாவுக்கு பச்சை கொடியும் காட்டியதை சில காலங்களுக்கு முன்பு பார்த்தோம், அதன் விளைச்சல்தான் இந்த அவசர அவதாரமோ:

    Reply