கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 115 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரம் பெற்ற இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமைக்காக இவர்களுக்கு 1.8 மில்லின் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டது.
கிளிநொச்சிப் பகுதிகளில் தற்போது மின்சார விநியோகம் விரிவாக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை மின்சார சபையினர் கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சட்டவிரோத மின்பாவனையாளர்கள் பிடிப்பட்டனர்.