நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சாட்சியமளிக்கவுள்ளார்.

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சாட்யமளிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இவர் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் வைத்து சாட்சியமளிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சாட்சியமளிக்கவுள்ளதாக ஆணக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பில் நடைபெற்றுவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், முன்னாள் அரச அதிகாரிகள், சமயப்பிரதிநிதிகள், சமூகப்பிரதிநிதிகள் எனப்பலர் சாட்சியமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் இம்மாதம் நடைபெறவிருந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *