கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது.
யாழ். மாநகரசபை உறுப்பினரும், கிளிநொச்சி. யாழ்.மவாட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அலுவலகங்களின் தலைவருமான மௌலவி சுபியான் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளததாக மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபருடனான சந்திப்பிற்கு முன்னதாக கிளிநொச்சி பள்ளிவாசலில் வைத்து கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறியவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் திருநகர். கிளிநொச்சி நகர்ப்பகுதி, 55ஆம் கட்டை, நாச்சிக்குடா, பள்ளிக்குடா முதலான பகுதிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.