கல்முனை மின்சார சபைக்கட்டத்தில் தூக்கிடப்பட்ட நிலையில் மின் அதியட்சகரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபையின் கல்முனைக்கிளையில் கடமையாற்றி வந்த சிரேஸ்ட மின்அத்தியட்சகரான பிரேமதாச (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைப்பட்டுள்ள நிலையில் இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.