யாழ்.குடாநாட்டிற்கான ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகள் மற்றும், ரயில் நிலையங்கள் இருந்த இடங்கள் நில அளவை செய்யப்பட்டு அடையாளமிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ருயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான இடங்களில் அத்துமீறி குடியேறியிருக்கும் மக்களை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி மாதம் யாழ்.குடாநாட்டிலுள்ள ரயில் பாதைகளை மீளமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போதே அதன் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.