குடாநாட்டில் புதிய இராணுவ காவல்நிலையங்கள் தோற்றம் பெறுகின்றன.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் யாழ்.குடாநாட்டில் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வந்த இராணுவ காவலரண்கள், சோதனைநிலையங்கள் என்பன மீண்டும் புதிய முறையில் அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டு வீதிச் சந்திகளின் சில இடங்களில் இராணுவ சோதனை நிலையங்களையும், காவலரண்களையும் இராணுவத்தினர் புதிதாக அமைத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. முன்னர் இருந்த இடங்களிலேயே இவை மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இணுவில் கந்தசாமி கோவில் சந்தியிலும், வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் தேர்முட்டிக்கு அருகாமையிலும் புதிய இராணுவ காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடாநாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு புதிய இராணுவ காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *