மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கபட்டுள்ளார். மாணிக்கப்போடி சசிகுமார் (வயது 35) என்ற தமிழ் ஊடகவியலாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மூவர் கொண்டு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஜெயந்திபுரத்திலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் தாக்கப்பட்டுள்ளார். இதாக்குதலினால் தலையிலும் கையிலும் காயமேற்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.