வயலில் தேங்கி நின்ற நீரை வானம் உறிஞ்சியது. நவாலியில் மக்கள் வியப்புடன் அவதானித்தனர்.

வயல் நிலத்தில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தை வானம் உறிஞ்சிய காட்சியை நேற்று ஞாயிற்றுக்கிழமை நவாலி மேற்கில் பொதுமக்கள் கண்டு அதிசயித்தனர். யாழ்.நவாலி மேற்கில் நண்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றது. வயல் வெளியில் தேங்கி நின்ற நீர் திடீரென் பெரும் ஒலியுடன் வானை நோக்கி சுழன்று சுழன்று சென்றது. இதனை அதிசயத்துடன் பார்த்த மக்கள் அச்சமடையவும் செய்தனர் சுனாமி அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டதென அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியதையும் காணக்கூடியதாகவிருந்தது.

இந்நீர் உறிஞ்சல் சுமார் அரைமணி நேரம் இடம்பெற்றது. கடந்த இரு நாட்களாக மழை விட்ட நிலையில் கடும் வெப்பம் நிலவியது. வளியமண்டலத்திலுள்ள அமுக்க வேறுபாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், இவ்வாறான சம்பவம் சாதாரணமாக இடம்பெறக்கூடியதுதான் என வளிமண்டலவியல் அவதான நிலைய பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரவித்துள்ளார். இவ்வாறான மினி சூறாவளிகள் மக்களின் உயிர் மற்றும், உடமைகளுக்கும் சேதத்தை எற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீரை வான் உறிஞ்சும் சம்பவங்கள் சில சமயங்களில் கடலில் தோன்றுவதை பலர் அவதானித்துள்ளனர் ஆனால், வயல் நீர் இவ்வாறு உறிஞ்சப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வியப்பினை எற்படுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *