இவர்கள் தானா ஈழத்தைப் பெற்றுத்தர இருந்தார்கள்?! :அழகி

Kuppi_Cynideபுலம்பெயர் தமிழ் மக்களே!
இன்று பனிவிழுந்து வெள்ளை வெளீரென்று ஜரோப்பிய மண்ணெங்கும் அழகாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. நத்தார் பண்டிகைக் காலமாதலாலும் அழகினை வேண்டியும் மெழுகுவர்த்திகளை ஏற்றி அதன் அழகை ரசித்துக் கொண்டிருப்பீர்கள். மெழுகுவர்த்தியும் தன்னை எரித்து, தானே உருகி, தன்னையே அழித்தும் ஒளியைக் கொடுத்து மற்றவர்களைச் சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கும்.

இப்படித்தான் ஒரு போராளி என்பவனும் இருக்க வேண்டும். ஒரு உண்மையான போராளி இப்படித்தான் இருப்பான். ஒரு இனத்துக்காகவும் ஒரு வர்க்கத்துக்காகவும் போராடும் போராளி தன் சுக போகங்களை மறந்து தன் உடன் பிறப்புக்களையும் துறந்து தியாக மனப்பான்மையுடன் வாழ வேண்டும். அத்துடன் சுதந்திரம் வேண்டி நிற்கும் அந்த மக்களையும் நேசிக்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தமர்கள் தான், மக்களுக்கு தலைமையேற்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தமர்களைத் தான் வரலாறும் நேசித்துக் கொண்டிருக்கின்றது.

உலகத்தில் இன விடுதலையையும் வர்க்க விடுதலையையும் அடைந்த நாடுகளையும் அதன் வரலாறுகளையும் எடுத்துப் படிக்கும் போது அந்தந்த நாட்டுக்காக தங்களையே அர்ப்பணித்த மாபெரும் தலைவர்கள் பற்றியும் அவர்கள் செய்த தியாகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். கியூபா புரட்சியைவென்ற சேகுவரா பிடல்கஸ்ரோ, நிக்குரவாவின் புரட்சியை வென்ற சன்ரிஸ்தா ஒட்டகே, ரசியப் புரட்சியைத் தந்த லெனின், சீனாவில் புரட்சியை வெடிக்கச் செய்த மாவோ வியட்நாமில் கொசுமினும் தன் வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை தன்னின மக்களுக்காய் சிறையிலே கழித்தனர். இன்றுவரையும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நெல்சன் மண்டேலா பற்றியும் அவர்கள் பட்ட கஸ்ரங்கள் பற்றியும் அறியலாம். அவர்கள் படங்களைப் பாருங்கள் இப்படியான தலைவர்கள் வாடி வதங்கி தோலும் தடியுமாகவே காட்சியளிப்பார்கள். ஏன்….? மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடி வதங்கியிருக்கும் போது இவர்கள் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. இவர்கள் எப்பொழுதும் மக்கள் சிந்தனையுடனும், மக்களோடுமே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்டினியால் செத்து மடிந்து கொண்டிருந்த வேளையில் பிரபாகரனும் அவரது சகாக்களும் தமிழ் நாட்டு நடிகர்கள் போல மினுமினுத்துக் கொண்டே காட்சியளித்தார்கள். இவ்வளவு பிரச்சினைகள் மத்தியில் இவர்களுக்கு உணவு எங்கிருந்து வந்தது….?

புலம்பெயர் தமிழ் மக்களே, இங்கு புலிக்கு பணம் சேர்ப்பவர்களை தயவுசெய்து கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். அவர்களின் வீடுகளுக்குச் சென்று பாருங்கள். அவர்கள் எல்லோரும் எப்படி எல்லாம் வாழ்கின்றார்கள் என்பதைக் கண்டு கொள்வீர்கள். ஏதாவது விடுதலை உணர்வு கொஞ்சமாவது இருக்கின்றதா…? ஆனால் சில பேர் விடுதலையென்றும் போராட்டம் என்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டுக்குப் போய் ஆயுதம் ஏந்திப் போராட இவர்களோ அல்லது தங்கள் பிள்ளைகளையோ அனுப்ப இவர்கள் தயாராக இருக்கின்றார்களா..? இதற்கு புலிக்கொடியைத் தூக்குபவர்கள் எல்லோரும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

நாம் திரும்பத் திரும்ப இந்த விடயங்களைத் தான் எழுத வேண்டியுள்ளது. அத்திவாரம் இல்லாமல் எப்படிக் கட்டிடம் கட்ட முடியாதோ அப்படித்தான் விடுதலை அமைப்புக்களும். ஆனால் எந்தவொரு விடுதலை பற்றியும் தெரியாத, புரியாத ஒரு கூட்டம் தான் புலிக்கொடியுடன் அலைந்து கொண்டு திரிகின்றது. முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் நடந்த எம் மக்களின் அழிவுகளைக் காணும் போதும், தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போதும் எப்படியெல்லாம் நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இராணுவத்தாலும் புலிகளாலும் எமது கலாச்சாரம் பெண்மை தாய்மை கிழித்தெறியப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் ஏன் நடந்தது. இதைத் தடுத்திருக்க முடியாதா..? எமது பலம் பலவீனம் எல்லாம் புரிந்து கொண்டிருந்தோமோ இவையெல்லாவற்றையும் நாம் ஆராயவில்லை. முயற்சியும் செய்யவில்லை. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் புலிகளும் புலிகளுக்கு ஆதரவான மாமாக்களும் தான். நடந்து முடிந்த போரின் வடுக்களும் வேதனைகளும் இன்னுமே எம்மை உருக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும்.. ஏன் இறந்து போனவர்களின் இரத்தவாடையும் பிணவாடையும் கூட இன்னும் மாறாத நிலையில் இங்கே அடுத்த கட்டப்போருக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எமது மக்களையும் எமது மண்ணையும் கொடுரமாகச் சிதைத்த இந்தப் பாசிசப் புலிக்கூட்டம் மீண்டும் தலைமை தாங்க முற்படுவது வேதனைக்கும் வெட்கத்துக்குமுரிய விடயமாகும். உலக நாடுகள் புலிகளை ஏன் தடைசெய்தது எனப் பார்ப்போமாயின் பிரபாகரனுக்கும் பில்லாடனுக்கும் நிறையவே ஒற்றுமைகள் இருக்கின்றது.
1.இரண்டு பேரும் ஆயுதப்பிரியர்கள்
2.இரண்டு பேரும் கல்வியை பற்றிய தெளிவில்லாதவர்கள்.
3.இரண்டு பேரும் பெண்களை மதிக்காதவர்கள்.
4.இரண்டு பேரும் தாக்குதலில்தான் கவனம் கொண்டவர்கள். பின் விளைவுகள் பற்றிய அறிவில்லாதவர்கள்.
5.பில்லாடன் உலகவர்த்தக மையத்தைத் தாக்கி ஈராக் மக்களையும் ஆப்கானிஸ்த்தான் மக்களையும் கொண்டு குவிக்க காரணமானார்.
6.பிரபாகரன் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி சிங்கள தமிழ் இந்திய அரசியல் வாதிகளைக் கொன்றதோடு சாதாரண அப்பாவிப் பொது மக்களையும் கொன்று குவித்தார்.
7.பில்லாடன் பாடசாலைக்குப் போன பெண்பிள்ளைகளைக் கொலை செய்தார்.
8.பிரபாகரன் பாடசாலைக்குப் போய் கொண்டிருந்த 12 வயதுக்கும் /அதற்குக் குறைந்த வயதொத்தப் பிள்ளைகளையும் கட்டாயமாகப் பிடித்து இயக்கத்தில் சேர்த்து அவர்களுக்கு குண்டுகள் கட்டி வெடிக்கச் செய்து கொலை செய்தார்.
9.பில்லாடன் பல மனைவிமார்களுடன் வாழ்ந்தார். பிரபாகரன் தன் மனைவி குழந்தைகள் குடும்பமென வாழ்ந்தார்.
இப்படியாக இருவரிலும் நிறையவே ஒற்றுமைகள்.

உண்மையில் பிரபாகரன் தமிழ்ப் பெண்களை மதித்திருந்தால் இறுதிக்கட்டப் போரில் இந்தப் பெண் பிள்ளைகளை எல்லாம் இராணுவத்திடம் நிராயுதபாணிகளாக சரணடையச் செய்திருக்க மாட்டார். ஏற்கனவே இராணுவம் பற்றித் தெரிந்திருந்தும் இப்படி நடந்த கொண்டதற்குக் காரணம் தானும் தன் குடும்பமும் அழியும் போது மற்றத் தமிழ் மக்களும் அழியட்டுமே என்ற குறுகிய நோக்கம்தான். மக்களை நேசிக்கும் ஒரு உண்மையான தலைவவன் எந்த இடர் வந்தாலும் இறுதிவரை மக்கள் பற்றியே சிந்தித்திருப்பான். மக்கள் பற்றியே சிந்திக்கவும் வேண்டும். இந்தப் புலம்பெயர் நாடுகளில் மனித நேயமற்றவர்கள் இன்றும் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு திரிகின்றார்கள். சிந்தனை என்பது இவர்களுக்கு இல்லை. தங்களைக் கதாநாயகர்களாகக் காட்டி திருமணம் செய்து கொள்வதற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவுமே திரிகின்றார்கள். இவர்களை இப்படியே விட்டு வைப்பீர்களேயானால் ஈழத்தில் ஒரு தமிழருமே மிஞ்சமாட்டார்கள். இவர்கள் ஈழத்தில் செய்த தியாகம் தான் என்ன…? இவர்கள் ஏன் புலிக்கொடியைத் தூக்குகிறார்கள் என்றால் ஈழநாட்டுக்குப் போய் போராடி மரணிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே. வாழத்தெரிந்த கூட்டம்.  இவர்கள் கூடவிருந்தே குழிபறிப்பார்கள். தமிழினமே இனிமேலும் மோசம் போகாதீர்கள். தமிழ் மக்கள் புலிகளிடம் மோசம் போனது போதும். எல்லோரும் இனியாவது விழித்திருங்கள்.

நித்திரை கொள்பவனை எழுப்பி விட முடியும். ஆனால் நித்திரை கொள்பவன் போல் இருப்பவனை எழுப்பி விட முடியாது. மனித நேயமுள்ளவர்கள் எல்லோருமாக சேர்ந்து எமது ஈழத்தை மீட்டெடுக்கும் வேலைகளில் இறங்க வேண்டும். எமது உள்ளங்களால் இப்போதும் நாம் ஈழப்போராட்டத்திலே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதலில் நாம் முன்பு விட்ட தவறுகளுக்கு எம்மை உட்படுத்தாமல் முன்பு எமது போராட்டத்தினுள் இருந்த மோசடிகாரர்கள் வியாபாரிகள் சந்தர்ப்பவாதிகள் என்போரை இனங்கண்டு இந்தப் போராட்டத்தில் இருந்து அவர்களை ஒதுக்கிவிட வேண்டும். போராட என்ற போர்வையில் இயக்கங்களுக்குள் வந்து சுகபோகங்களை அனுபவிக்கவென கொள்ளையடித்து பழிவாங்கி தங்களது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றி இன்று பலர் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யார்? இவர்கள் ஏன் இன்னமும் வெளிநாடுகளில் இனங் காணப்படவில்லை? இந்த நிலமைகளுக்கு முதலில் தமிழ் மக்களாகிய நாங்கள் விடை தேட வேண்டும். தயவு செய்து தமிழ் மக்களே, உங்கள் கல்போன்ற இதயங்களை கொஞ்சமேனும் வெடிக்க வைத்து சில பசுமையான தாவரங்களை வளர விடுங்கள். அப்பொழுதுதான் அனாதைகளான எங்கள் உறவுகள் சந்றேனும் ஆறுதலடைய முடியும். மாவீரர்கள் யார்? கப்டன், கேணல், 1ம் கப்டன், வீரவேங்கை இவர்கள் எல்லாம் யார்? போராளிகளை எப்படி தரம் பிரித்தீர்கள்? பலவந்தமாக பிடித்துக் கொண்டு போய் குண்டுகளை கட்டி வெடிக்க வைத்து படம் பிடித்து பணம் சேர்த்தீர்களே இவர்கள் யார்? எதிரியிடம் பிடிபடாமல் சயனைட் விழுங்கி உயிர் இழந்தார்களே இவர்கள் யார்? இவ்வளவு காலமும் மற்றவர்களுக்கு சயனைட் கொடுத்து மற்றவர்களுக்கு குண்டுகளை கட்டி கொன்று தொலைத்த பிரபாகரனும் அவரது சகாக்களும் எக்காளமிட்டு முழங்கி கொண்டு இருந்தார்களே இவர்கள் யார்? முள்ளிவாய்காலில் தம்மை காப்பாற்றுவதற்கு மக்களை பணயமாக்கி கொன்று குவித்தார்களே – தப்பியோட முயன்ற பொது மக்களை தனது வாளினால் வெறிகொண்டு மூர்க்கமாக வெட்டி வெட்டி கொன்றாரே பிரபாகரனின் மகன் சாள்ஸ் இந்தப் புலிப் பிரகிருதிகள் எல்லாம் யார்? மக்கள் பட்டினியால் சாகும்போது அத்தியாவசியப் பொருட்களை விற்று காசு பண்ணினார்களே இவர்கள் யார்?

உங்களை எல்லாம் பத்திரமாக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புகின்றோம் என்றவுடனேயே பிரபாகரனும் அவரது குடும்பமும் உடனடியாக சரணடைந்ததே இவர்களெல்லாம் யார்? இறுதியாக முள்ளிவாய்க்காலில் நெஞ்சமெல்லாம் வெடித்து சிதறும் வண்ணம் தமிழ் பெண்கள் இராணுவத்தால் குதறி எறியப்பட்ட காட்சிகளைப் பார்க்கிறோமே இதற்கெல்லாம் காரணமானவர்கள் யார்? இறுதிநேரத்தில் நடந்த எம் மக்களின் அழிவுகளைக் காணும்போதும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போதும் எப்படியெல்லாம் நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இராணுவத்தாலும் புலிகளாலும் எமது கலாச்சாரம் பெண்மை தாய்மை கிழித்தெறியப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் ஏன் நடந்தது. இதைத் தடுத்திருக்க முடியாதா.. ? எமது பலம் பலவீனம் எல்லாம் புரிந்து கொண்டிருந்தோமோ? இவையெல்லாவற்றையும் நாம் ஆராயவில்லை. முயற்சியும் செய்யவில்லை. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் புலிகளும் புலிகளுக்கு ஆதரவான மாமாக்களும்தான். நடந்து முடிந்த போரின் வடுக்களும் வேதனைகளும் இன்னுமே எம்மை உருக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும். . ஏன் இறந்து போனவர்களின், இரத்தவாடையும் பிணவாடையும் கூட இன்னும் மாறாத நிலையில் இங்கே அடுத்த கட்டப்போருக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

உலக நாடுகளில் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் விடுதலைப் புலிகள் அல்லது தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் கொடியை எந்த தமிழர் போராட்டங்களிலும் தூக்கி பிடிக்கிறார்களே யார் இவர்கள்? ஈழ மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக குதறப்படும் காட்சிகளை விற்று இங்கு காசு சேர்த்தவர்கள் யார்? அடி அத்திவாரத்தோடு பிடுங்கி எறியப்பட்ட பண்பு கெட்ட புலிகளை இன்னும் தூக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்களே இந்த புலம்பெயர் தமிழர்கள் இவர்கள் யார்?

வெறும் பணத்திற்காகவும் தமது சுயநல தாகங்களுக்காகவும் ஜிரிவி எனும் விபச்சார தொலைக்காட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்களே – எப்போதாவது மக்களுக்கு சிறு உண்மையைக் கூட சொல்லாமல் ஐரோப்பாவெங்கும் மந்தைகளாக்கி வைத்திருக்கிறார்களே யார் இவர்கள்? இப்பொழுதும் எமது போராட்டம் வளர முடியாதவாறு புலிகள் என்ற பெயரில் அறிக்கைள் விட்டுக் கொண்டிருக்கிறார்களே இவர்களை நாம் எப்போது இனங்காணப் போகின்றோம்? பிரபாகரன் இன்னமும் காட்டிற்குள் இரண்டாயிரம் போராளிகளுடன் பாதுகாப்பாக இருக்கிறார் என வாய்சவடால் விட்டு மற்றவர்களை மடையர்களாக்கி கொண்டிருக்கிறார்களே இவர்கள் எல்லாம் யார்? புலிகளுக்கு பணம் சேர்த்து திரிந்தவர்களெல்லாம் மிக விலை உயர்ந்த கார்களில் உலா வருகின்றார்களே அவை எங்கனம் சாத்தியம்?
இவை குறித்து முதலில் நாம் தெளிந்த சிந்தனையுடன் சிந்திப்போமானால் என்ன தவறுகள் விட்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இவ்வளவு காலமும் தவறு செய்துள்ளோம் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதிலும் வர வேண்டும். அப்பொழுதுதான் இந்த அரசியற் பொறுக்கிகளை சமூக விரோதிகளை நமது போராட்டத்தைக் கருவறுத்தவர்களை ஓரங்கட்ட முடியும். ஓரம் கட்ட வேண்டும்.

தனி ஈழம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு விடிவு இல்லை என்பதையே சமீப காலம் வரை இலங்கைப் பேரினவாதம் இடித்துரைக்கின்றது. தியாக உணர்வுடன் தெளிந்த சிந்தனையுடன் எமது போராட்டத்தை நாம் மீள அமைத்துக் கொள்ள வேண்டும். கும்பலிலே கோவிந்தா என எமது போராட்டம் கொச்சைப்படுத்தப்படக் கூடாது. உண்மையான போராளிகள் எப்போதும் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. பிரபாகரன் மாதிரி எதிரியிடம் உயிர் பிச்சை கேட்க மாட்டார்கள். பிரபாகரனால் போசித்து வளர்க்கப்பட்ட பலரும் ராஜபக்சவின் காலடியில் வீழ்ந்து உயிர்ப்பிச்சை கேட்டு காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவையாவும் புலம்பெயர் மக்கள் தம் கண்முன்னே பார்த்து தெரிந்து கொண்ட விடயம். மரணபயம் என்பது பயங்கரமானது என்பது உண்மை. ஆனால் தனது கையில் அதிகாரம் இருக்கிறது என்ற நினைப்பில் ஏராளமான அப்பாவி தமிழ் மக்களை பிரபாகரனும் அவனது சகாக்களும் கொன்று குவித்தார்களே. அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு மற்றவர்களின் மரணபயம் ஏன் விளங்கவில்லை? ஏனெனில் பிரபாகரன் மனிதனாக வாழ்ந்திருக்கவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்திய போராட்ட வீரன் பகத்சிங்தான் நினைவுக்கு வருகின்றான். (தேசியத் தலைவர் தனது முன்னுதாரணம் பகவத் சிங் கட்டபொம்மன் என்றெல்லாம் எத்தனை சவடால் விட்டிருக்கிறார்.) தன்னை தூக்கில் போடும் போது தனது தலையை கறுப்புத் துணியால் மூடவேண்டாம் நான் சாகும் போதும் எனது தாய் மண்ணை பார்த்துக் கொண்டே சாக விரும்புகின்றேன் என முழங்கினான். இவனல்லவா வீரன்!! இவனல்லவா போராளி! இவனல்லவா மாமனிதன்! இவனல்லவா தியாகி! இவனல்லவா சூரிய புதல்வன்! இத்தகையவர்களிடம் இருந்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் போராடப் புறப்பட வேண்டுமாயின் இலட்சக் கணக்கான மக்களின் குருதியை வீணடித்த தமிழ் பெண்களின் மானத்தை பலி கொடுத்த சரணடைவு என்ற அவமானத்தை பெற்றுத் தந்த புலிக்கொடி முதலில் அழிக்கப்பட வேண்டும். புலி பினாமிகள் தமது தொடர்ச்சியான சுகபோக வாழ்வை தக்கவைத்துக் கொள்வதற்காக ஈழமக்களை விற்பனை செய்வதை இத்தோடு நிறுத்த வேண்டும்.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

48 Comments

  • Kulan
    Kulan

    அழகி என்ற பெயரில் அழகான ஒரு ஆண்கட்டுரை தளமேறியிருக்கிறது. எழுத்தில் ஆண்மையிருந்தது. புலிகளே மற்ற எந்த இயக்கமுமோ மக்களை; மக்கள் விடுதலையை மையப்படுத்தவில்லை. தலைவனைக் காப்பதுதான் விடுதலை என்றால் புலிகள் மாவியாக்கள் தானே. இன்னும் வாங்கிய பணத்துக்குக் கணக்குக் காட்டவில்லை ஆனால் தண்டத் தொடங்கிவிட்டார்கள். புலிதன்னால் இயலாது என்றுதானே சரணடைந்தது. இதன்பின்பு என்ன போராட்டம் வேண்டியிருக்கிறது. தயவுசெய்து விடுதலைபற்றிப் பேசுபவர்கள் எதுவிடுதலை என்பதைப்பற்றிப் பேசுவது முதல் முக்கியமானது. தம்மை நேசித்து மக்கள் அழியும் போதும் ஆணவத்துடனும் வாழும் ஆசையுடனும் அந்த நேசித்த மக்களையே அழிந்து நின்று புலிகள் தியாகிகளா துரோகிகளா என்று இன்னும் மக்கள் இனங்கானாது இருப்பார்களானால் இந்த இனம் அழிவதைத் தவிர வேறு விடுதலை இருக்க முடியாது. ஒரு இனத்தின் துரொகிகளை துரோகிகளின் ஊடுருவல்களை இனங்காட்ட முடியாத இணையத்தளங்களும் ஊடகங்களும் அழிக்கப்படுவது அவசியம். இந்த ஊடகங்கள்தான் இனத்துரோகிகளின் ஊடகங்களாக இருந்தன. புலிகள் எம்மைத் துரோகி என்றார்கள் ஆம் நாம் புலிகளுக்குத் துரோகிதான்: புலி மாவியாக்குளுக்குத் துரோகிதான். ஆனால் புலிகள் தமிழ் இனத்துக்கே துரோகிகள் அல்லவா? ஏன் மனித இனத்துக்கோ துரோகிகள் அல்லவா. மனிதவளர்ச்சிக்காகப் புலிகள் ஆற்றிய பணி ஒன்றை தயவுசெய்து யாராவது இங்கே கூறுவீர்களா? புலிக்கொடியோ எந்த மிருகங்களின் கொடியோ காற்றில் உயரும்போது மனிதவினம் மடியும். கொடிகள் காற்றில் பறக்காது மனிதனின் மானம்தான் காற்றில் பறக்கும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    :://மனிதவளர்ச்சிக்காகப் புலிகள் ஆற்றிய பணி ஒன்றை தயவுசெய்து யாராவது இங்கே கூறுவீர்களா? //
    என்ன இப்படி கேட்டு விட்டியள் குலன்; இதோ பட்டியல்;
    மாற்று அமைப்புகளை கொலை;
    கூட்டணிக்கும் கொலை;
    ஊடகத்துக்கும் கொலை;
    மக்களுக்கும் கொலை;
    பக்கத்து நாட்டு அதிபருக்கும் கொலை;
    புலம் பெயர் தேசத்தில் கொலை;
    காட்டுக்குள் கொலை;
    வீட்டுக்குள்ளும் கொலை:
    ஆண்களையும் கொலை;
    பெண்களையும் கொலை;
    குளந்தைகளையும் கொலை;
    ஆடு மாடு கொலை;
    கருணை கொலை;
    கொலை கொலை கொலை;
    இதுபோதாதா இந்த மானிடத்துக்கு???

    Reply
  • Danu
    Danu

    :://மனிதவளர்ச்சிக்காகப் புலிகள் ஆற்றிய பணி ஒன்றை தயவுசெய்து யாராவது இங்கே கூறுவீர்களா? //

    rohan on December 17, 2010 10:29 am.
    வேள்வி என்ற பெயரில் கோயில்களில் மிருகவதை செய்வதைப் புலிகள் தான் நிறுத்தினார்கள். சீதனம், கசிப்பு, களவு, சில்மிஷம் போன்றவை தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டதும் அவர்களால் தானே.

    Reply
  • S. சுகுணகுமார்
    S. சுகுணகுமார்

    பல்லி நீங்கள் குழந்தைகளை கொலை செய்து புலியாகி விட்டீர்கள்! நீங்கள் விட்ட சில

    கடலுக்குள் கொலை!
    கலாச்சாரத்திற்கு கொலை!
    தமிழ் மக்களின் அரசியலை கொலை!
    தமிழ் மக்களின் இருப்பைக் கொலை!
    தமிழ் முஸ்லீம் உறவைக் கொலை!
    தமிழ் சிங்கள நட்பைக் கொலை!
    இந்திய ஈழ நட்பை கொலை!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    Rohan சீதனத்தை எங்கு நிறுத்தினார்கள். ரூபாயில் இருந்தது ஈரோவாகவும் டொலர் பவுண்சாகவும் மாறியது. தொகை உயர்ந்தது. சீதனத்தை நிறுத்து என்பவர்கள் புலத்திலும் ஊரிலும் என்ன திரட்டினார்கள் மண்ணா? புண்ணாக்கா? கசிப்பைத்தடுத்து சயனைடடுக் கொடுத்தார்கள். அது என்ன சில்மிஷம்? தமிழ்பகுதியில் ஒழித்தார்கள் என்பது பிழை தமிழ்பகுதியை ஒழித்தார்கள். தமிழை ஒழித்தார்கள்; நல்ல அனைத்தையுமே ஒழித்தார்கள் என்று திருத்துங்கள்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //ஒரு இனத்தின் துரொகிகளை துரோகிகளின் ஊடுருவல்களை இனங்காட்ட முடியாத இணையத்தளங்களும் ஊடகங்களும் அழிக்கப்படுவது அவசியம். இந்த ஊடகங்கள்தான் இனத்துரோகிகளின் ஊடகங்களாக இருந்தன.// குலன்
    கோபத்தில் எழுத்துக்களை விட்டுவிடக் கூடாது. எவருடைய கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் நாம் தடுக்கக் கூடாது. அவர்களுடைய கருத்துக்களே அவர்களை அம்பலமாக்கும். எமது கருத்துக்களுக்காக நாம் தொடர்ந்தும் எழுதுவோம்.

    //சீதனம் கசிப்பு களவு சில்மிஷம் போன்றவை தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டதும் அவர்களால் (புலிகளால்)தானே.// றோஹான்
    சீதனம்: புலிகளும் அதன் உறவுகளுமே சீதனம் வாங்கியே திருமணம் செய்தனர். புலிகளுக்கு தெரிந்தால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வீதம் வழங்க வேண்டி இருந்ததால் திருமணத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் சீதனம் இல்லாது திருமணம் நடந்ததாக கூறிக்கொண்டன. அதாவது சீதனம் இரகசியமாக வழங்கப்பட்டது.
    கசிப்பு: கசிப்பு ஒழிக்கப்பட்டது ஓரளவு உண்மை. அதற்குக் காரணம் சிறிலங்காவில் இருந்து சாராயம் இறக்குமதி செய்தனர். இந்த இறக்குமதியை அதிகரித்துத் தரும்படி புலிகளிடம் சிங்கள வர்த்தகர் வேண்டுகோள் விட்டு இருந்தார். அப்படி அதிகரித்தால் லண்டனில் கொமிசன் கொடுக்கவும் தயாராக இருந்தனர்.
    களவு: இருப்பது எல்லாவற்றுக்கும் வரி. அதனால் மக்கள் எல்லாவற்றையும் பதுக்கியே பாதுகாப்பாக வைத்திருந்தனர். பெரும்பாலும் புலிகளுடைய வரித் திணைக்களமே களவுதானே.
    சிலுமிசம்: கேணல் கிட்டு சிலுமிசத்துக்கு போயிருந்த போதே தாக்குதலுக்கு உள்ளானார். கேர்ணல் கருணா சுதந்திரப் பறவைகளை அழைத்துச் சென்று சிலுமிசம் பண்ணுவதாக புலிகளே செய்தி வெளியிட்டனர். தற்போது கேபிக்கும் அதே குற்றச்சாட்டு. இவர்கள் இதையெல்லாம் புலிப் பாசறையில் தானே பயின்றனர்.

    ._._._._._.

    அழகி இன் கட்டுரையில் அடிப்படைத் தவறு ஒன்று உள்ளது. புலிப் போராளிகளோ புலிகளுடைய தலைமையோ இராணுவத்திடம் சரணடைந்தது தவறு என்று கொள்ள முடியாது. ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழும் உரிமை உடையவன். சரணடைந்தவர்களைக் கொல்வதே மோசமானது. ஆனபடியால் சரணடைந்தவர்களைக் கொன்ற இலங்கை இராணுவம் மனித விரோதமாக நடந்து கொண்டு உள்ளது.புலிகளும் முன்னர் சரணடைந்த மாற்று இயக்கப் போராளிகளை இராணுவத்தினரை பொலிசாரை மக்களைக் கொன்றவர்களே.

    ஆனால் தங்கள் பலம் பலவீனங்களை அறியாமல் சரணடைவை நோக்கிய அரசியலை முன்னெடுத்தது புலித் தலைமைகள் விட்ட பாரிய தவறு. மக்களைப் பணயம் வைத்து தாக்குதலை நடாத்திவிட்டு பணயம் வைக்க எவரும் இல்லை என்ற போது சரணடைய முற்பட்டதே தவறு.

    ஆனால் தமிழ் மக்களை மேன்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய புலிகள் அம்மக்களைப் பணயம் வைத்துப் போராடியது மிக மோசமானது. அம்மக்களை இலங்கை இராணுவத்தை வைத்துக் கொலை செய்து அவலங்களை வைத்து அரசியல் செய்தது பொறுக்கித் தனமான மூன்றாம்தர அரசியல்.

    ஆனால் சயனைட் கடிக்கவில்லை சரணடைந்து விட்டனர் என்று கொச்சைப்படுத்துவது அழகிக்கு அழகல்ல. இந்த முடிவை கிளிநொச்சி வீழ்ச்சியுடன் புலிகள் எடுத்து இருந்தால் எத்தினையோ ஆயிரம் போராளிகளும் பொதுமக்களும் காப்பாற்றப்பட்டு இருப்பர். இவ்வளவு அழிவு இடம்பெற்றிருக்க மாட்டாது.

    த ஜெயபாலன்.

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    கொலைகளற்ற போராட்டத்தில், கொலைகளற்ற கலாச்சாரத்தில் வாழ்ந்த, வாழுகின்ற நல்ல அகிம்சைவாதிகளின், சீவகாருண்ய எழுத்துகளை படிக்கும் போது, அவை புத்தரின் போதனைகளாகவே ஜொலிகின்றன.
    கொலைகளை வகைப்படுத்தி, அசை போட்டு, எழுதியவை, எவ்வளவு ரசனைக்குரியதாகவிருக்கின்றன. அழகியையும், அதன் பின்னே வந்த ஐந்து பேரையும் வெளிநாட்டைக் காண வைத்து, தங்களை விமர்சிக்க மட்டும் வாழ விட்டதை, “மனிதவளர்ச்சிக்காகப் புலிகள் ஆற்றிய பணி” என்பதில் எனக்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை.

    Reply
  • Ajith
    Ajith

    அன்பான அழகி அவர்களே ,
    அழகான தமிழில் என்ன உணர்ச்சிவசமான எழுத்து ஆற்றல். நிச்சயமாக நீங்கள் தமிழர் விடுதலைக்கு தமிழீழ விடுதலைக்கு தலைமை தாங்க முன்வந்திருபதற்கு தமிழ் மக்களாக பிறந்த எவனும் பெருமை படாமல் இருக்க முடியாது. உங்கள் ஆற்றல், அறிவு, தியாக மனப்பான்மை, தமிழ் மக்கள் பட்டினி கிடந்தபோது நீங்களும் பட்டினி கிடந்ததை எண்ணும் பொது மெய் சிலிர்கிறது. சீனத்து புரட்சி மாசேதுங், ரஷ்ய புரட்சியை தந்த லென்னின் , தென் ஆப்ரிக்கா விடுதலி சிற்பி நெல்சன் மண்டேலா வரிசையில் ஈழத்து புரட்சி மன்னன் அழகி ஆம் நாம் இபோதாவது ஒரு தலைவனை பெற்று உள்ளமே என்று நினைகின்ற போது தமிழ் இனம் உங்கள் தலைமையில் தனி ஈழம் அடைவது என்பது நிறுத்த முடியாத தவிர்க்க முடியாத வரலாறு திருப்பு முனையாகும். உங்கள் தனி தமிழ் ஈழத்திற்கான முடிந்த முடிவு சிங்கள பாசிசத்தின் தேசம்நெட் தோழர்களான ஜெயபாலன், சோதிலிங்கம், நந்த, துரை, பல்லி, Constantine போன்றவர்களுக்கு கசாயத்தை கொடுத்தது போல் இருக்கும். இந்த விடுதலி போராடத்தின் 60 வருட கால பகுதியில் எத்தனை தலிவர்கள் வந்து போனார்கள். 1970 களிற்கு முந்திய முதலாளித்துவ மார்க்சிச தலைமைகள் தமிழர்களின் மேல் குதிரை ஓடினார்கள். சிங்கள பசிசவதிகளோடு சேர்ந்து மக்களை கொலை செய்தார்கள். 70 களின் பின் டெலோ, ப்லோடே,ல்ட்டே, ஈரோஸ், எப்ர்ல்ப் என்று நூற்றுகணக்கான இயக்கங்கள் தோன்றி இந்தியாவின் ஏவல்கள்ஆயும், சிங்கள துணை படைகளையும் தமிழ் மண்ணில் நடத்திய கொலை, கொள்ளை , கடத்தல் கற்பழிப்பு எவளவு எவளவு? ஏன் இன்றும் அது குறையவில்லையே? நாளாந்தம் கொலை கொள்ளை, கடத்தல் , கப்பம் சேர்த்தல், சிங்களவகளோடு சேர்ந்து டக்லஸ் கூடம் ஒரு பக்கம், கருணா கூடம் ஒருபக்கம் சித்தார்த்தன் கூடம் ஒருபக்கம். இவர்களா எமக்கு தலைமைகள்?

    உங்கள் கடந்த கால அரசியல், போராட்ட வரலாறு இவற்றை பகிரங்கபடுத்தி மக்கள் முன் எப்போது வெளிவர போகிறீர்கள். உங்கள் எதிர்கால திட்டங்கள், போராட்ட வடிவங்கள், எப்படி அமையபோகிறது என்பதை எப்போது மக்களுக்கு அறிவிக்க போகிறீர்கள். நீங்கள் எராளமான கேள்விகளை இங்கு புலம் பெயர் மக்களிடம் முன் வைத்து உள்ளீர்கள்? நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு தரக்கூடிய அறிவோ அனுபவமோ இங்குள்ள மக்களுக்கு இல்லை. நீங்கள் சொன்ன பல விடயங்கள் மக்களுக்கு விளங்காது, தெரியாது. இங்குள்ள மக்களுக்கு தேசம்நெட் ஒன்று இருப்பதே தெரியாது.

    நீங்கள் எல்லவற்றிற்கும் புலிகளை காரணம் என்று கூறிக்கொண்டே இருக்கிறீர்கள். புலிகள் இயக்கம் முற்றாக அழிகபட்டு விட்டது என்பது நீங்கள் அறிந்த உண்மை. அதிலும் தாயகத்தில் ஒரு புலிகூட இப்போது இல்லை. அங்கு இப்போது கொலை கொள்ளையில் ஈடுபடுவது EPDP , Karuna , ஸ்ரீ லங்கா இராணுவம். அங்கு இன்று மக்கள் சுதந்திரமாக திரிய முடியாத நிலையில் உள்ளார்கள். நீங்கள் ஏன் இன்னும் இங்கு புலியை பற்றி கவலை படு கொண்டு இருக்கிறீர்கள். இவர்களால் நீங்கள் நடதபோகும் விடுதலை போராடம் எப்படி தடைபட முடியும். அது சரி நீங்கள் எப்போது உங்கள் பிள்ளை குட்டிகள், உங்கள் தோழர்களுடன் தாயகம் போய் விடுதலை போராடத்தை ஆரம்பிக்க உள்ளீர்கள் என்பதனை தெரிவிக்க உள்ளீர்கள்.
    வாழ்க தமிழ் ஈழம்! உங்கள் விடுதலை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    Reply
  • Kulan
    Kulan

    //கோபத்தில் எழுத்துக்களை விட்டுவிடக் கூடாது. எவருடைய கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் நாம் தடுக்கக் கூடாது//- ஜெயபாலன்! ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஊடகங்களுக்கு என ஒரு தர்மம் உண்டு. சரியான தகவல்களை மக்களுக்குக் கொடுப்பது மிக முக்கியம். தகவல்கள் பிழையானது எனத் தெரிந்தும்: ஒரு இனமே அழிக்கப்பட்டுக் கெண்டிருப்பதை அறிந்தும்; நேசித்த மக்களையே புலிகள் அழிக்கிறார்கள் என்பதை அறிந்தும்; மனச்சாட்சிக்கு மாறாக ஊதுவதை ஊடகம் என்று ஏற்க இயலாது.
    இன்று நடந்து முடிந்த போரை எத்தனை ஊடகங்கள் மீழாய்வு செய்தன. கொடுத்த பணத்துக்கே கணக்குக் காட்டுவில்லை காசு சேர்க்கிறார்கள். இந்திய நடிகர் நடிகைகளை இன்னும் இன்னும் எத்தனையோ இந்தியக் கலைஞர்களை அரசில்வாதிகளை அழைத்துப் பணம் பிடுங்குகிறார்கள். இது சரியாக மாவியாக்கள் செய்யும் வேலை. ஒரு மக்கள் கூட்டத்தை அழித்தவர்களே மீண்டும் அந்த மிஞ்சியிருக்கும் மக்களை அழித்துச் சுகபோக வாழ்வு வாழ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். இவர்களை இவர்களின் ஊடகங்களை சரியாக இனங்காட்ட வேண்டிய பொறுப்பு மற்றய ஊடகங்களுக்கு உண்டு என்பதும் எனது தாழ்மையான கருத்து. வெளிப்படையாகவே தெரிகிறது நச்சுப்பாம்பு என்று அதன்பின்பும் அதை இனங்காட்டாமல்; தொடர்ந்து வளர விடுவோமானால் அடுத்து நடக்கும் பழிகளுக்கும் குற்றத்துக்கும் நாமும் பொறுப்பாளிகளே. இனத்தின் விடுதலை என்று புறப்பட்டவர்கள் அதே இனத்திலேயே சுட்டுப்பழக முயன்றபோது எமக்கென்ன என்று இருந்தார்களே அவர்களும்; அதன் ஊதுகுழலாக இருந்தவர்களும் இன்று எம்மக்களுக்கு நடந்த அவலத்தை; பழிகளை ஏற்றே ஆகவேண்டும். தயவுசெய்து சரியான தகவல்களினூடாக தரணிக்கு தகுதியற்றவர்களை இனங்காட்டுவது ஊடகங்களின் பொறுப்பு. எம்மக்களை மட்டுமல்ல புலிகளை அறித்த பெரும் பங்கு புலி ஊடகங்களுக்கு உண்டு.

    Reply
  • thurai
    thurai

    //வேள்வி என்ற பெயரில் கோயில்களில் மிருகவதை செய்வதைப் புலிகள் தான் நிறுத்தினார்கள்//றோகன்

    யாராவது தவறி மிருகவதை செய்திருந்தால் புலிகளின் மனிதவதைதான். தமிழர் செய்தது மிருகவதை புலிகள் செய்தது மனிதவதை.

    தமிழீழம், ஈழவிடுதை, ஈழவிடுதலைப் புலிகள் இவைகள் யாவுமே உலகின் பயங்கரவாதிகளின் சொத்தாகி விட்டன. உலகில் எங்கும் ஒரு தமிழன் தமிழன் என்று சொன்னால் அவன் பயங்கரவாதி யென்னுமளவிற்கு புலிகள் தமிழரைக் கொண்டுவந்து விட்டுள்ளார்கள்.

    உலகின் எந்த மூலையில் பார்த்தாலும் தமிழின் பெயரால் தமிழரையே சுரண்டி வாழ்ந்த வாழும் கூட்டமே உள்ளது. மண்ணிலும், புலத்திலும் வாழும் தமிழர்களின் மனங்கள் மாறாமல் தெளிவுபெறாமல், விட்ட தவறுகளை உணராமல் முன்னெடுக்கும் செயல்களெல்லாம் தமிழர்களிற்கு அழிவினையே தரும்.-துரை

    Reply
  • Kusumpu
    Kusumpu

    ஜெயபாலனின் கருத்துக்கு அணிசேர்க்கும் முகமாக இதை எழுதுகிறேன்:/கோபத்தில் எழுத்துக்களை விட்டுவிடக் கூடாது. எவருடைய கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் நாம் தடுக்கக் கூடாது/ இதைத்தானே ஜெயபாலன் நாங்களும் சொல்கிறோம். சயனைட்டுக் கட்டிவிட்டு குழந்தைகளுக்கும்; குண்டுகட்டி அனுப்பிய கரும்புலிகளுக்கும்; வயறுவற்றினாலும் வாழத்துடித்த அந்த மக்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது. இந்த உரிமை புலிகளால் மறுக்கப்படவில்லை என்பதை எவராலும் சொல்ல முடியுமா? இந்த வாழும் உரிமை மிருகங்கள் ஜந்துக்களுக்கும் உண்டு. ஒரு இனத்தின் வாழும் உரிமையையே மறுத்தவர்கள் புலிகள்: அதற்காக அரசு செய்தது சரி என்று கொள்ளக் கூடாது.

    விளங்காமுடி-/அழகியையும் அதன் பின்னே வந்த ஐந்து பேரையும் வெளிநாட்டைக் காண வைத்து தங்களை விமர்சிக்க மட்டும் வாழ விட்டதை “மனிதவளர்ச்சிக்காகப் புலிகள் ஆற்றிய பணி” என்பதில் எனக்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை./ உங்களுக்கு நீங்களே சரியான பெயரை வைத்திருக்கிறிர்கள். கஞ்சியைக் குடித்தாலும் கொட்டிலுக்குள் வாழ்ந்து மகிழ்ந்த எமது சமூகம் வெளிநாட்டுக்கு ஏன் போருக்கு முன்வரவில்லை என்று எண்ணிப்பார்த்தீர்களா? அவசியம் இருக்கவில்லை. உங்களுக்கு வெளிநாடு பெரிதாக இருக்கலாம் அதற்காக அனைவருக்கும் என்று கணக்கிடுவது தப்பு பல்லிக்கு செத்தைதான் சொர்க்கம். இதைப் பல்லியிடமே கேளுங்கள்

    அஜித்- எப்போது தமிழ் எழுதப்பழகினீர்கள். நான் நினைத்திருந்தேன் நீங்கள் இங்கிலிசு (ஆங்கிலேயனுக்கு) பிறந்தவர் என்றல்லவா கணக்குப் போட்டிருந்தேன். தமிழில் என்னமா எழுதுகிறியள். தேசத்தையும் அதில் பின்னோட்டம் விடுபவர்களையும் பாசிஸ்டுக்கள் என்கிறீர்கள். நீங்கள் ஆங்கிலப் பாசிஸ்டாகவா இருந்தீர்கள். புலிகள் என்ன பாசிஸ்டுக்கள்? பாசிஸ்ட் என்றான் என்ன என்று தெரியுமா? இந்த பாசிஸ்டுக்களிடன் அரசும் அதிகாரமும் இருக்க வேண்டும். பின்நோட்டம் விட்டவர்களுக்கே பின்னால் பிடரியில் அடிவிடும் தணிக்கை என்ற பெயரில். அதிகாரமே இல்லாதவர்களை பாசிஸ்ட் என்று எழுதும் புதிய வரைவு இலக்கணத்தை உங்களிடம் அறிய விரும்புகிறேன். பாசிச எண்ணம் கொண்டவர்கள் பாசிசத்தை நடைமுறைப்படுத்து அதிகாரம் வேண்டும் அஜித்.

    Reply
  • Danu
    Danu

    கோயிலில் வேள்விதான் மிருகவதையா?? மற்றும்படி ஆடு மாடு கோழி அடித்துச் சாப்பிடுவதெல்லாம் எதில் சேர்த்தி?? புலிகளில் இருந்தவர்களெல்லாம் தாவர போசணிகளா??

    Reply
  • n.ravi
    n.ravi

    அஜித் எல்லாம் தெரிந்த உலகநாதன் போல எழுதுகிறார். ஆனால் ஒரு சின்ன உண்மை தெரியவில்லை. இலங்கை அரசுகள் நமது எதிரிகள். புலிகள் விடுதலை என்று சொல்லி விட்டு இனத்தையே அழித்தது எத்தனை தலைமுறை சென்றாலும் மறக்காது.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //கியூபா புரட்சியைவென்ற …….. தன் வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை தன்னின மக்களுக்காய் சிறையிலே கழித்தனர்.//
    சிறையிலிருப்பது தலைமைத்துத்துவத்திற்கான கட்டாய தகமை என்கிறீர்கள். அப்ப டக்ளசோ அல்லது பரந்தன் ராஜனோ உங்கள் தலைமை!
    மக்களை அணிதிரட்ட புளொட்டும் ஈரோசும் ஈபிஆர்எல்எவ்ம் எவ்வளவு முயற்சித்தனர். ஆரம்பத்தில் அதில் வெற்றி கண்டமாதிரி இருந்தாலும். 1986ல் ரெலோ புளொட் ஈபிஆர்எல்எவ் புலிகளால் தடைசெய்யப்பட்டபோது பெரிதாக மக்கள் அலட்டி கொள்ளவில்லையே! ஏன்? இராணுவ குறிக்கோளை முன்னிறுத்தி செயற்பட்ட புலிகளிற்கு பின்னால்தானே இந்திய இராணுவ வருகையின் பின் மக்கள் வலிய போனார்கள். ஏன்?
    இன்று மகிந்தாவுடன் அனைத்து தமிழர் கட்சிகளும் இணக்க அரசியலுக்கு போன பின்னும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த மகிந்தாவிற்கு துணிவுவரவில்லையே ஏன்?. புலிகள் மீது ஈழத்தமிழருக்கு பெருவெறுப்பு உண்மையெனில் சிங்கள அரசும் புலியெதிர்ப்பு அணியிணரும் ஏன் புலி என்றவுடன் பதட்டபடுகிறீர்கள். அமைதியாய் உங்கள் அரசியலை செய்ய வேண்டியதுதானே! எதற்கு இவ்வளவு ஆத்திரமான ஆர்ப்பாட்டமான கட்டுரைகளும் பின்னூட்டங்களும். உங்கள் அமைதியின்மை புலிகள் தொடர்பான உங்கள் அச்சத்தையே காட்டுகின்றன!

    Reply
  • saleem
    saleem

    //1986ல் ரெலோ புளொட் ஈபிஆர்எல்எவ் புலிகளால் தடைசெய்யப்பட்டபோது பெரிதாக மக்கள் அலட்டி கொள்ளவில்லையே! ஏன்? ..//

    தோஸ்து அதேபோலத்தான் 2009ல் புலிகள் அழிக்கப்பட்டபோதும் அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் மக்கள் உங்கட அடிபிடியைப் பார்த்தவிட்டு ஒதுங்கி தாமும் தம்பாடாய் இருக்கினம். எப்பவும் பிரச்சினை வெளிநாட்டில் இருந்துகொண்டு அடக்குமுறை, போராட்டம், விடுதலை தமிழீழம் என பொழுதுபோக்கிற்காக கத்திக் கொண்டிருப்பவர்களால்தான்.

    சரி அவங்கள்தான் பதட்டத்திலை கட்டுரை எழுதுறாங்கள் பின்னூட்டம் எழுதுறாங்க என்று சொல்லும் நீங்கள், அதுக்குப் பின்னூட்டம் விடுறதும் பதட்டத்தில்தானே….

    Reply
  • பல்லி
    பல்லி

    //வேள்வி என்ற பெயரில் கோயில்களில் மிருகவதை செய்வதைப் புலிகள் தான் நிறுத்தினார்கள். சீதனம், கசிப்பு, களவு, சில்மிஷம் போன்றவை தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டதும் அவர்களால் தானே.::// rohan
    இது உன்மைதான் அவர்கள்(புலிகள்) அதை செய்வதால் அதனை மற்ற்வர்கள் செய்யாமல் தடுத்தனர்: புலிகள் எப்போதும் தமது வியாபாரத்தில் கவனம் செய்வார்கள்;

    //ஜெயபாலன்..//
    உங்கள் கருத்துக்கு பல்லி பதில் சொல்லவில்லை; காரனம் நீங்கள்தானே பல்லி என பலர் குமுறுவதால்;

    //s. சுகுணகுமார்//
    இத்தனைக்கு பின் சரனடைந்தும் கொலையானார்களே;

    //தமிழ்பகுதியை ஒழித்தார்கள். தமிழை ஒழித்தார்கள்; நல்ல அனைத்தையுமே ஒழித்தார்கள் என்று திருத்துங்கள்.//
    அது மட்டுமா குசும்பு இறுதியில் தம்மையும் ஒழித்தனரே;

    //என்பதில் எனக்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை.//எள் என்பதன் பொறுள் மிக சிறியது என்பதே, அதனால் இவருக்கு சிறிது சந்தேகம் இல்லையா?, அல்லது இருகா? அல்லது இருக்கு இல்லையா??

    :://. உங்கள் தனி தமிழ் ஈழத்திற்கான முடிந்த முடிவு சிங்கள பாசிசத்தின் தேசம்நெட் தோழர்களான ஜெயபாலன், சோதிலிங்கம், நந்த, துரை, பல்லி, Constantine போன்றவர்களுக்கு கசாயத்தை கொடுத்தது போல் இருக்கும்.//ajith

    இது மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் பல்லி கசாயத்தை கூட தண்ணி கலந்துதான் குடிப்பேன், காரணம் தண்ணி உன்மையானது இயற்கையானதும்கூட, இது புரிய உங்களுக்கு சிறிது சிரமமாகதான் இருக்கும்,

    //சீனத்து புரட்சி மாசேதுங், ரஷ்ய புரட்சியை தந்த லென்னின் , தென் ஆப்ரிக்கா விடுதலி சிற்பி நெல்சன் மண்டேலா வரிசையில் //
    இங்கு கூட உங்களுக்காய் உங்கள் தலமைக்காய் தம்முயிரை மாய்த்து கொண்ட தமிழரையோ அல்லது புலிகளையோ ஏன் கரும் புலிகளையோ அல்லது கார்த்திகை 27யோ உங்களால் உதாரனம் காட்ட முடியவில்லை, ஆனால் பல்லி வட்டுகோட்டையில் இருந்து வந்தாறுமூலை, அம்பாறை இருந்து ஆணைபந்தி எனதான் எழுதுகிறேன் வாழ்கிறேன்;
    //கூடம் //
    முதலில் கூட்டத்துக்கு ட் டன்னாவை சேர்க்கவும் பின்பு தேசத்துக்கு கருத்தை தேடவும்; இது கிண்டல் அல்ல வேதனை வேதனை;

    //உங்கள் கடந்த கால அரசியல், போராட்ட வரலாறு இவற்றை பகிரங்கபடுத்தி மக்கள் முன் எப்போது வெளிவர போகிறீர்கள்.//
    இப்போது மட்டும் என்ன நாம் எழுதுவதை எருமைமாடுகளா படிக்கிறது, நீங்களும் மக்கள்தானே; அதில் உங்களுக்கு சந்தேகமா?
    //புலிகள் இயக்கம் முற்றாக அழிகபட்டு விட்டது என்பது நீங்கள் அறிந்த உண்மை. அதிலும் தாயகத்தில் ஒரு புலிகூட இப்போது இல்லை. அங்கு இப்போது கொலை கொள்ளையில் ஈடுபடுவது ஏPDP , Kஅருன , ஸ்ரீ லங்கா இராணுவம்.//
    அப்படியாயின் கருனா என்ன நெல்சன் மண்டலோவின் பாசறையில் பயிற்ச்சி பெற்று மாசேதுங் உடன் மதிய உணவை உண்டு லெனின் கதை கேட்டு தூங்கி வளர்ந்தாரா??
    :://அது சரி நீங்கள் எப்போது உங்கள் பிள்ளை குட்டிகள், உங்கள் தோழர்களுடன் தாயகம் போய் விடுதலை போராடத்தை ஆரம்பிக்க உள்ளீர்கள் என்பதனை தெரிவிக்க உள்ளீர்கள்//
    உங்கள் நாடுகடத்திய ஈழம் நடைமுறைக்கு வரும்போது; அங்கு உங்கள் தொல்லை தாங்காமல் இங்கு வந்தோம்; ஏழரைசனி மரணசனியாக இங்கு தொடர்வதால் உங்கள் ஆசை நிறைவேற வாய்ப்புகள் அதிகம்தான்;

    Reply
  • rohan
    rohan

    /கோயிலில் வேள்விதான் மிருகவதையா?? மற்றும்படி ஆடு மாடு கோழி அடித்துச் சாப்பிடுவதெல்லாம் எதில் சேர்த்தி?? புலிகளில் இருந்தவர்களெல்லாம் தாவர போசணிகளா??/

    வரிசை வரிசையாக ஆடுகளையும் கோழிகளையும் கோயில்களுக்கு முன்னால் அடித்துச் சாப்பிடுவது தவறு என்று சிறுவனாக இருந்த நாட்களிலிருந்தே நான் நினைத்தேன். வீட்டுக் கோடிகளிலிருந்தோ இறைச்சிக் கடைகளிலிருந்தோ வருவது வரட்டும். கோயில் வதையை நிறுத்தியதில் எனக்குத் திருப்தி தான்.

    //சீதனம் கசிப்பு களவு சில்மிஷம் போன்றவை தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டதும் அவர்களால் (புலிகளால்)தானே.//
    ‘கிட்டத்தட்ட’ என்று தான் சொல்லியிருக்கிறேன். உலகின் அந்தச் சட்டங்களும் சமய நெறிகளும் முழுமையாகக் கடைப்பிடிக்கபடுவதில்லை. நடக்கிற விடயங்களில் 80% மாற்றம் ஏற்பட்டால் அதுவே பாரிய வெற்றி.

    /சீதனம்: புலிகளும் அதன் உறவுகளுமே சீதனம் வாங்கியே திருமணம் செய்தனர். புலிகளுக்கு தெரிந்தால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வீதம் வழங்க வேண்டி இருந்ததால் திருமணத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் சீதனம் இல்லாது திருமணம் நடந்ததாக கூறிக்கொண்டன. அதாவது சீதனம் இரகசியமாக வழங்கப்பட்டது./
    திருமணத்துக்கு நெடுநாள் முன்னரே மகளுக்குக் காணி எழுதி வத்த அப்பாக்களையும் நான் அறிவேன். ஆனாலும், கத்தரிக்காய் விலை பேசுவது போல பேரம் பேசும் நாட்கள் போய் ஓரளவு நியாயமாக ஆண்களைப் பெற்ற அப்பா – அம்மா நடக்கும் தேவை வந்ததை நான் கண்டேன்.

    /கசிப்பு: கசிப்பு ஒழிக்கப்பட்டது ஓரளவு உண்மை. அதற்குக் காரணம் சிறிலங்காவில் இருந்து சாராயம் இறக்குமதி செய்தனர். இந்த இறக்குமதியை அதிகரித்துத் தரும்படி புலிகளிடம் சிங்கள வர்த்தகர் வேண்டுகோள் விட்டு இருந்தார். அப்படி அதிகரித்தால் லண்டனில் கொமிசன் கொடுக்கவும் தயாராக இருந்தனர்./
    புலிகள் வியாபாரிகள் என்பதில் யாருக்கு மறு கருத்து இருக்கிறது? கசிப்பு மிக மலிவாக ஊரில் கிடைத்தது. அது குடும்பங்களையும் அழித்து குடிமக்களையும் கொன்றது. புலிகள் பணம் பண்ணினர் – குடும்பங்கள் காக்கப்பட்டன. சாராயம் அந்த வகையில் பெற்றர் ஒஃப் த ஈவில்ஸ் என்பது என் கருத்து.

    /களவு: இருப்பது எல்லாவற்றுக்கும் வரி. அதனால் மக்கள் எல்லாவற்றையும் பதுக்கியே பாதுகாப்பாக வைத்திருந்தனர். பெரும்பாலும் புலிகளுடைய வரித் திணைக்களமே களவுதானே./
    ஆனாலும், போட்டிருக்கிற காப்புகளுக்காக கையை வெட்டுவதோ சங்கிலிக்காக கழுத்தைத் திருகுவதோ தவிர்க்கப்பட்டமை நல்ல விடயம் தானே? புலிகள் இரண்டு பவுண் தங்கம் ‘அன்பளிப்பாக’ வாங்கியது பற்றுச் சீட்டு வழங்கிச் செய்யப்பட்ட பகல் கொள்ளை தான்.

    /சிலுமிசம்: கேணல் கிட்டு சிலுமிசத்துக்கு போயிருந்த போதே தாக்குதலுக்கு உள்ளானார். கேர்ணல் கருணா சுதந்திரப் பறவைகளை அழைத்துச் சென்று சிலுமிசம் பண்ணுவதாக புலிகளே செய்தி வெளியிட்டனர். தற்போது கேபிக்கும் அதே குற்றச்சாட்டு. இவர்கள் இதையெல்லாம் புலிப் பாசறையில் தானே பயின்றனர்./
    தலைவரே காதல் திருமணம் பற்றிய தனது கட்டளையை மீறிய போது மற்றவர்களும் என்ன எதிர்பார்க்க முடியும்?

    Reply
  • BC
    BC

    //புலிகளுடைய தலைமையோ இராணுவத்திடம் சரணடைந்தது தவறு என்று கொள்ள முடியாது. ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழும் உரிமை உடையவன். சரணடைந்தவர்களைக் கொல்வதே மோசமானது. //
    ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உயிர்வாழும் உரிமை தங்களுக்கு பிடிக்காதோருக்கு மறுத்தவர்கள் புலிகள். பலவந்தமா பிடித்தவர்களை சாகடித்து, தங்களை சேர்ந்தவர்களையே குப்பி கடிக்க வைத்து சாகடித்தவர்கள். புலிகள் குப்பி கடித்து தற்கொலை செய்வதை பெருமைக்குரிய விடயமாக்கி விழா கொண்டாடி தற்கொலை கலாச்சாரம் வளர்த்தார்கள். பாலசிங்கத்தின் மனைவி மகிழ்ச்சி பொங்க தமிழ்பிள்ளைகளுக்கு குப்பி கட்டிவிடும் வீடியோ பார்த்திருப்பீர்கள். எதற்க்காக கழுத்தில் குப்பி கட்டி விட்டு மற்றவர்களை சாகடித்தார்கள்? ஒரு சமூகத்தை சீரழித்த கொடிய புலிகளை இராணுவத்திடம் சரணடையும் போராட்டகாரர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தாது.
    குலன் உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.

    Reply
  • BC
    BC

    சலீம், சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    :://ஆத்திரமான ஆர்ப்பாட்டமான கட்டுரைகளும் பின்னூட்டங்களும். உங்கள் அமைதியின்மை புலிகள் தொடர்பான உங்கள் அச்சத்தையே காட்டுகின்றன!//
    அமெரிக்கா மிக கல்வி நிறைந்த நாடுதான்; ஆனால் அங்கும் கழிவறையில் ஆணகள் பெண்கள் படங்கள் அடையாள சின்னமாக போடபட்டுள்ளது, அதுக்காக படிக்க தெரியாததால் படத்தை போட்டிருப்பதாக நினைப்பது தவறு, அது அவசரமாக போகும் இடம் அங்குநின்று கவனித்து படித்து போகுமுன் நாம் போனவர் அசிங்கபட்டு விடுவார் என்பது தெரிகிறது எமக்கு; ஆனால் உங்களுக்கு அது தடுமாற்றம்?? அது போலவே நம்ம கருத்தை கவனியாது கவனித்ததை வைத்து நீங்கள் பின்னோடம் இடுவது நான் மேல் சொன்னதுதான்;

    Reply
  • thurai
    thurai

    //வீட்டுக் கோடிகளிலிருந்தோ இறைச்சிக் கடைகளிலிருந்தோ வருவது வரட்டும். கோயில் வதையை நிறுத்தியதில் எனக்குத் திருப்தி தான்.//றோகன்

    வேள்வி என்பது சுகாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். முஸ்லிம்கள் உயிரோடு வெட்டியதையே சாப்பிடுவார்கள். இதனை பைபிளிலும் சொல்லியுள்ளார்கள், இரத்தம் முழுவதும் வடிந்த பின்னரே மாமிசத்தை உண்ணும்படி. கோவில் முன்வெட்டி உண்ணும் வேள்வி இறைச்சிகள்
    100 வீதம் பாதுகாப்பானது. கடைகளில் செத்ததோ, நோய்வாய்ப்பட்டதோ யாரும் அறியார். தமிழர் சொன்னால் மூடநம்பிக்கை யாரும் சொனால் ஏற்பார்கள்- துரை

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //தோஸ்து அதேபோலத்தான் 2009ல் புலிகள் அழிக்கப்பட்டபோதும் அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை//சலீம்
    2006-2009 காலப்பகுதியில் ஈழத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் பொதுமக்களை அச்சத்தில் உறையவைக்க செய்யப்பட்ட படுகொலைகள் (நாடளமன்ற உறுப்பினர் ஊடகவியலாளார் மனிதவுரிமைவாதிகள் உட்பட) எதற்காக. புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளபட்ட 50 000 மேற்பட்ட படுகொலைகள் எதற்காக? இன்றும் ஈழத்திலுள்ள அளவிற்கதிமான இராணுவ பிரசன்னம் ஏன். புலி ஆதரவு மனநிலையிலிருக்கும் மக்களை அச்சுறுத்ததானே!

    1986ல் ரெலோ புளொட் ஈபிஆர்எல்எவ் புலிகளால் தடைசெய்யப்பட்டபோது ஊரடங்கு சட்டமும் உயர்பாதுகாப்பு வலயங்களும். வீதி தடைமுகாங்களும் புலிகளுக்கு தேவைபடவுமில்லை பொதுமக்களை படுகொலை செய்யவுமில்லை. புலம்பெயர் நாடுகளிலிருந்த தமிழர் ஆர்பாரித்து புலிகளை எதிர்க்கவுமில்லை.
    //…..அதுக்குப் பின்னூட்டம் விடுறதும் பதட்டத்தில்தானே//பதட்டமில்லை நண்பரே ஒருவகை எரிச்சல். எனது பின்னூட்டமும் அந்தவகைபட்டது.
    //அமெரிக்கா மிக கல்வி நிறைந்த நாடுதான்……//பல்லி
    அமெரிக்காவிலுள்ள எல்லோருக்கும் ஆங்கிலம் வாசிக்க தெரியுமென உங்கள் 100வீத நம்பிக்கையே தவறு. அதன் பிரகாரம் “படிக்க தெரியாததால் படத்தை போட்டிருப்பதாக நினைப்பது தவறு” என்ற கூற்றும் தவறு. உதாரணத்திற்கு அமெரிக்காவிற்கு போகவேண்டாம் நீங்கள் வாழும்நாட்டில் எத்தனை பேருக்கு உங்கள் நாட்டின் தாய்மொழி வாசிக்க தெரியுமென கவனித்து பாருங்கள். உங்கள் நாடு எழுத்தறிவில் அமெரிக்காவிற்கு ஒன்றும் குறைந்ததல்ல நண்பரே.
    //கோயிலில் வேள்விதான் மிருகவதையா?? மற்றும்படி ஆடு மாடு கோழி அடித்துச் சாப்பிடுவதெல்லாம் எதில் சேர்த்தி?? //
    ஐரோப்பாவில் இறைச்சிகடைக்கு மிருக ஜீவகாருண்ய அமைப்புக்களால் மாடு குதிரையை துப்பாக்கியல் சுட்டும் பன்றி ஆட்டை மின்சார அதிர்சியிலும் நன்றாக மூடப்பட்ட அறையில் கொல்ல வேண்டுமெனவும் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் இந்து கோவில்களில் நடக்கும் வேள்வி என்பது மக்கள் வயது பால் வேறுபாடின்றி சுற்றிநிற்க ஆடு கோழிகளின் கழுத்தை இரத்தம் பிறீட அறுப்பதை கண்டிக்கின்றனர். மிருகவதை என்கின்றனர்.

    Reply
  • saleem
    saleem

    தோஸ்து 2009ல் புலிகள் அழிக்கப்பட்டபோதும் மக்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததென்பது உலகறிந்த விடயம்.நான் திரும்ப எழுததேவையில்லை. அடுத்து ஜரோப்பாவில் எப்படி ஆடுமாடு வெட்டுவதென்பது அனைவருக்கம் தெரியும். நான் எழுதியது என்னவென்பதை மீள படித்துப் பார்க்கவும்

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //அடுத்து ஜரோப்பாவில் எப்படி ஆடுமாடு வெட்டுவதென்பது அனைவருக்கம் தெரியும்.//
    நண்பரே அது Danu என்பவரின் கேள்விக்கான பதில்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பல்லி-/அது மட்டுமா குசும்பு இறுதியில் தம்மையும் ஒழித்தனரே;/ எதிர்பரசியலைத்தவிர எந்த அரசியதை புலிகள் வைத்திருந்தார்கள். ஒழிந்துபோகாமல் இருப்பதற்கு. மீண்டம் புதியசிந்தனைகளைத் தட்டி எழுப்புமாறு எதையும் செய்யாமல் செத்தபுலியை உயிர்பிக்கும் முயற்சியே நடக்கிறது.

    துரை!- /வேள்வி என்பது சுகாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். முஸ்லிம்கள் உயிரோடு வெட்டியதையே சாப்பிடுவார்கள். இதனை பைபிளிலும் சொல்லியுள்ளார்கள், இரத்தம் முழுவதும் வடிந்த பின்னரே மாமிசத்தை உண்ணும்படி. / அப்படியானால் துரை இரத்தவறை என்னமாதிரி. இரத்தம் எல்லாம் வடிந்துபோனால் பக்கத்தில் நிற்கிறவனின் இரத்த்ததிலா இரத்தவறை செய்வது? இதை வெளிநாடுகளில் (கிறீஸ்தவநாடுகளில்) இரத்தப் புடிங் என்கிறார்கள். இது எங்கே எடுகப்படுகிறது.

    /கோவில் முன்வெட்டி உண்ணும் வேள்வி இறைச்சிகள் 100 வீதம் பாதுகாப்பானது. கடைகளில் செத்ததோ, நோய்வாய்ப்பட்டதோ யாரும் அறியார். தமிழர் சொன்னால் மூடநம்பிக்கை யாரும் சொனால் ஏற்பார்கள்- துரை/ துரையின் கருத்துடன் உடன்பட்டாலும் இந்துக்கள் மச்சம் சாப்பிடவே கூடாது அவர்கள் இக்கொலைகளை கோவிலில் செய்வதை ஏற்பது கடினமாக உள்ளது. முக்கியமாக உலர்வலய நாடுகளில் இறைச்சி ஒரு மணித்தியாலத்தில் அதிக பற்றீரியா பிடித்துவிடுகிறது. அதனால்தான் தாய்லாந்து சிங்கபூர் போன்ற நாடுகளில் தொட்டியில் மீனை வைத்திருப்பார்கள். சாப்பிடவருபவர் எந்த மீனைக்காட்டுகிறாரோ அதை உணவாகத் தயாரிப்பார்கள்.

    Reply
  • karu
    karu

    அஜித் அவர்களே ஜயரின் நகைகளை கொள்ளையடித்தது புலிகளே தான் ஈபிடிபியோ அரச இராணுவமோ இல்லை இப்பவும் கொள்ளையில் ஈடுபடுவது புலிகளே- karu jaffna

    Reply
  • rohan
    rohan

    //ஜயரின் நகைகளை கொள்ளையடித்தது புலிகளே தான் ஈபிடிபியோ அரச இராணுவமோ இல்லை இப்பவும் கொள்ளையில் ஈடுபடுவது புலிகளே- கரு//
    இது நியாயமான பேச்சு! இராணுவம் துப்பாக்கிகளைக் கொடுத்து வீரத் திலகமிட்டு, “சென்று வா புலி வீரனே – கொண்டு வா பணம் தங்கமெல்லாம் – கொன்று வா இடையில் வருபவரெல்லாம்” என்று வாழ்த்தி அனுப்பியது! நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வேறு எழுதுகிறீர்களா, நாங்களெல்லாம் நம்ப வேண்டும், பாருங்கள்!!

    Reply
  • Faizan
    Faizan

    //இந்த விடுதலி போராடத்தின் 60 வருட கால பகுதியில் எத்தனை தலிவர்கள் வந்து போனார்கள். 1970 களிற்கு முந்திய முதலாளித்துவ மார்க்சிச தலைமைகள் தமிழர்களின் மேல் குதிரை ஓடினார்கள். சிங்கள பசிசவதிகளோடு சேர்ந்து மக்களை கொலை செய்தார்கள். 70 களின் பின் டெலோ ப்லோடே இல்ட்டே ஈரோஸ் எப்ர்ல்ப் என்று நூற்றுகணக்கான இயக்கங்கள் தோன்றி இந்தியாவின் ஏவல்கள்ஆயும் சிங்கள துணை படைகளையும் தமிழ் மண்ணில் நடத்திய கொலை கொள்ளை கடத்தல் கற்பழிப்பு எவளவு எவளவு? ஏன் இன்றும் அது குறையவில்லையே? நாளாந்தம் கொலை கொள்ளை கடத்தல் கப்பம் சேர்த்தல் சிங்களவகளோடு சேர்ந்து டக்லஸ் கூடம் ஒரு பக்கம் கருணா கூடம் ஒருபக்கம் சித்தார்த்தன் கூடம் ஒருபக்கம். இவர்களா எமக்கு தலைமைகள்?// பிரபா என்றவரும் வந்து கடைசியில் சிங்கள இராணுவத்தின் காலையே தொட்டனர் எல்லாமே மக்களின் நலனிலிருந்து சித்திக்காதவர்கள் எல்லோருமே இராணுவத்தின் காலடியிலி முடிவர் இதற்கு நல்ல உதாரணம் பிரபாவேதான் என்று முடிவுரை சொல்லுங்கள் அஜித் அவர்களே!

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    /1986ல் ரெலோ புளொட் ஈபிஆர்எல்எவ் புலிகளால் தடைசெய்யப்பட்டபோது ஊரடங்கு சட்டமும் உயர்பாதுகாப்பு வலயங்களும். வீதி தடைமுகாங்களும் புலிகளுக்கு தேவைபடவுமில்லை பொதுமக்களை படுகொலை செய்யவுமில்லை. புலம்பெயர் நாடுகளிலிருந்த தமிழர் ஆர்பாரித்து புலிகளை எதிர்க்கவுமில்லை./(தோஸ்து)
    இதுதானே முள்ளிவாய்க்காலில் நாறியதுக்கு காரணம் இதைபோய் ஏதோ சாகசம் என்ற மாதிரி எழுத 1987ல் ஏன் இந்திய இராணுவம் வந்தது என்பதையும் எழுதலாமே.
    ஊரில் சிலபேர் கொக்கோ கோலா கொடுத்திருக்கலாம் பலபேர் ஊமைகளாக அழுதது உங்களுக்கு தெரியாது. காரணம் இப்போ மெளனித்த துப்பாக்கிகளுக்காக!
    புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பரிக்கவில்லையா? இவர்கள் எந்த நன்மை கருதியாவது ஆர்ப்பரித்தது உண்டா?
    இப்பவும் ஆர்ப்பரிப்பது மிஞ்சியுள்ள மக்களையும் குழிதோண்டி புதைக்கத்தானே!

    Reply
  • londonboy
    londonboy

    யாழ்ப்பாணத்தில் தற்போது புலிகளின் உறுப்பினர்கள் முகாம்களில் இருந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டால் அல்லது அரச தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி ஊர்வந்தால் அடிவிழுகிறது. புலிகளின் காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அடி உதை கொடுக்கிறார்கள். தினம் தினம் ஊர்களில் நடைபெறுகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் அக்காலத்தில் புலிகளுக்காக புலிகளினால் நியமிக்கப்பட்ட வரிவசூலிப்பவரும் மக்களிடமிருந்து நகை வீட்டுக்கு ஒரு பவுண் சேர்த்தவருமான ஒரு புலி உறுப்பினர் மீண்டும் இராணுவ முகாம் போய் முறையிட்டாராம். இராணுவம் ஊர் வந்து இதை விசாரிக்க மக்கள் இராணுவத்தின் முன்னாலேயே புலிக்கு அடி உதை கொடுத்தனராம் இந்த நபர் இப்போது கொழும்பில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார் அவரது உறவினர்களுடன். இந்த உண்மைக்கதையை முன்னாள் புலிகளின் ஆதரவாளன் புலிகளுக்கு ஸ்ரான்டிங் ஒடர் முள்ளிவாய்க்கால் காலம்வரை கொடுத்தவர், இன்று புலியை விமர்சிப்பவர் எனக்கு கூறிய கதைகளில் ஒன்று.

    மக்களுக்காக போராடியவர்களுக்கு(?) மக்களால் இப்படியான மரியாதையா!?

    Reply
  • BC
    BC

    கரு, ஜயரின் நகைகளை புலி கொள்ளையடித்தது என்ற செய்தியை புலி ஊடகங்கள் அமுக்கிவிட்டன. அப்படி செய்தி வெளியிட்ட புலி ஊடகங்கள் இலங்கை இராணுவம் செய்த மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தின. பாம்பு கடித்து தமிழன் இறந்தாலோ, மின்னல் தாக்கி தமிழன் இறந்தாலோ அது இலங்கை அரசின் செயல், அல்லது டக்ளஸ்சின் வேலை.

    செத்த புலி என்று Rohan சொல்வர். சிங்கள அரசின் அணுகுமுறைக்குத் துணை போகாமலும் அவர்களின் சதிவலைக்குள் வீழ்ந்துவிடாமலும் இருக்க வேண்டுமென்று இந்திய, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களையும், மக்களையும் அன்போடு வேண்டி நிற்கின்றோம் என்று இபபோ புலிகளின் அறிக்கை என்று ஒன்று வந்துள்ளதே! அதுவும் பொய் தானே!
    லண்டன்போயின் தகவல் மக்களை துன்புறுத்திய புலிகளுக்கு கிடைக்கும் தகுந்த மரியாதை. புலம் பெயர்ந்த நாடுகளில் புலிகள் மக்கள் பணத்தையும் சுருட்டிவிட்டு அடுத்த ரவுண்டுக்கு முயற்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    கோவிலில் ஆடுகளை வெட்டியதை தடை செய்த புலிகள் என்னமோ சமூக சேவை செய்து விட்டார்களாம். ஆனால் கோவில் ஐயர்களையே புலிகள் கொன்றிருக்கிறார்கள். அதாவது டக்ளஸ் இந்துசமய விவகார அமைச்சராயிருந்த காலத்தில் அந்தக் கோவில்களுக்குநிதி வழங்கப்பட்டது. அதனை அந்த ஐயர்கள் புலிகளிடம் கொடுக்கவில்லை என்று கொன்றார்கள்.

    அரசினால் சப்ளை செய்யப்பட்ட உணவையே மானம் கெட்டு தின்று கொழுத்த புலிகள் அரசிடம் கோவில்கள் பணம் பெற்றார்கள் என்று ஐயர்களையே கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் அரசிடமிருந்து பணம் பெற்ற கத்தொலிக்க பாதிரிகளை புலிகள் விழுந்து கும்பிட்டார்கள். அதனால்த்தான் இன்று உருத்திரபுரத்தில் கோடிகள் செலவளித்து கத்தொலிக்க கோவில்கள் கட்டுகிறார்கள். அதாவது அமெரிக்க ஏஜன்டுகளான பாதிரிகள் புலிகளின் சகல கிரிமினல் நடவடிக்கைகளிலும் பங்கு பற்றுகிறார்கள்.

    கோவில்களில் ஆடு வெட்டுவது பெரிய பிரச்சனையாம். ஆனால் ஐயர்களையே சுட்டுக் கொல்லுவது எப்படியாம்?

    வன்னியில் மக்கள் பட்டினி என்று வெளினாடுகளில் இம்மானுவல் பாதிரியுடன் சேர்ந்து கத்துபவர்கள் கோடிகள் செலவு பண்ணி கத்தொலிக்க கோவில்கள் கட்டிய காசுக்கு மக்களுக்கு உணவு கொடுத்திருக்கலாம் என்று சொல்லக் காணோம்!

    புலிகள் மற்றைய இயக்கங்களுக்கு மூடுவிழா செய்த பொளுது மக்கள் அமைதி காத்தனர். ஏனென்றால் “ஒரு உபத்திரவம்” தொலைந்தது என்ற காரணத்தினால்த்தானே ஒழிய புலிகளின் “கொள்ளை கொலைகளை” ஆதரித்து அல்ல.

    வெளினாடுகளில் புலிகளின் பெயரால் தின்று கொழுத்த இரண்டு தலைமுறைகள் உண்டு. அதனால்த்தான் வெளினாடுகளில் இந்த “ஈழ” ஆர்ப்பரிப்பு இன்னமும் தொடர்கிறது. ஆனால் இலங்கயில் புலிகள் தொலைந்தது பற்றியும் மக்கள் அதே மவுன வரவேற்பையே கொடுக்கிறார்கள்.

    மொத்தத்தில் கோவில்களில் ஆடு வெட்டுவது தப்பு என்று புலிகள் “சீர்திருத்தம்” செய்தார்களாம். ஆனால் ஐயர்களையே கொன்று என்ன பண்ணினார்களாம். இந்து சமயத்துக்கு சேவை செய்தார்களா அல்லது பாதிரிகளுக்கு சேவை செய்தார்களா?

    Reply
  • Ajith
    Ajith

    Faizan,
    I can’t answe you because it won’t reach you.
    You have the right to what you want? We live in a world of freedom of speech.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    1986ல் நடந்தற்கு 2009 லா எதிர் விளைவு. நல்ல லோஜிக்.
    //1987ல் ஏன் இந்திய இராணுவம் வந்தது …..//Jeyarajah
    தமது சுயநலம் பேண. ஆண்டுகள் 23 ஆனாலும் ஏன் என உங்களிற்கு சுயமாக அறியமுடியவில்லையா! சந்திரசேகர் என்பவரின் சுயஓப்புதல் கருத்து அண்மைகால தேசம்நெற் பதிவிலிருக்கு.

    Reply
  • rohan
    rohan

    //மொத்தத்தில் கோவில்களில் ஆடு வெட்டுவது தப்பு என்று புலிகள் “சீர்திருத்தம்” செய்தார்களாம். //
    கோயில்களில் ஆடு வெட்டுவது தப்பு என்பது என் கருத்து. அதைப் புலிகள் நிறுத்தினாலென்ன பூனைகள் நிறுத்தினாலென்ன எனது நன்றி அவர்களுக்கு உண்டு.

    Reply
  • thurai
    thurai

    //புலிகள் நிறுத்தினாலென்ன பூனைகள் நிறுத்தினாலென்ன எனது நன்றி அவர்களுக்கு உண்டு.//றோகன்
    புலிகள் ஆடுவெட்டுவதை நிறுத்தி ஆளைக் கொலைசெய்தாலென்ன எனது நன்றி அவர்களிற்கு என தெளிவாக சொல்லாம்தானே.-துரை

    Reply
  • palli
    palli

    //அமெரிக்காவிலுள்ள எல்லோருக்கும் ஆங்கிலம் வாசிக்க தெரியுமென உங்கள் 100வீத நம்பிக்கையே தவறு.//ajith
    ஆம் கல்வி நிறைந்த நாடு எனதானே சொன்னேன், கல்வி நிறைவுற்ற நாடு என நான் சொல்லவில்லை, அப்புறம் நம்ம நாடும் அமெரிக்காவுக்கு…
    //படத்தை போட்டிருப்பதாக நினைப்பது தவறு” என்ற கூற்றும் தவறு.//
    அதுக்கான விளக்கம் நானே சொல்லிவிட்டேன்; அவசரம் அவசரம்;

    //உதாரணத்திற்கு அமெரிக்காவிற்கு போகவேண்டாம் நீங்கள் வாழும்நாட்டில் எத்தனை பேருக்கு உங்கள் நாட்டின் தாய்மொழி வாசிக்க தெரியுமென கவனித்து பாருங்கள். உங்கள் நாடு எழுத்தறிவில் அமெரிக்காவிற்கு ஒன்றும் குறைந்ததல்ல நண்பரே.//
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் நம்ம பிள்ளைகள் புத்தகத்தை தூக்காமல் இரும்பை தூக்கினார்கள், புலிகள் சொல்லி ஏமாந்த தமிழர் எம்மிடம் பலர் உண்டு, அமெரிக்காவில் ஆழும் கட்சியின் செயல்பாட்டை கூட ஊடகங்கள் சர்வசாதாரனமாய் தட்டி கேப்பார்கள்; ஆனால் நம்ம மிருகங்களின் மூச்சைகூட ஒரு காலத்தில் ஊடகம் எழுத முடியாது; அமெரிக்கா தன்னிறைவு பெற்ற நாடு என சொல்லமுடியாது, ஆனால் நாம் குடிக்கும் தண்ணீருக்கும் கைஏந்துகிறோம் என அமெரிக்காவில் நாடுகடத்திய நாட்டின் பிரதமர் தகவல் சொல்லுகிறார்,

    //இந்து கோவில்களில் நடக்கும் வேள்வி என்பது மக்கள் வயது பால் வேறுபாடின்றி சுற்றிநிற்க ஆடு கோழிகளின் கழுத்தை இரத்தம் பிறீட அறுப்பதை கண்டிக்கின்றனர்… // -தோஸ்து
    கிட்டு சின்னமெண்டிஸை எப்படி கொன்றான் என பலதடவை சொல்லி விட்டேன்; பல நூறு பேர் பாத்திருக்க சூரன்போல் வலம் வந்து கட்டிய நிலையில் மெண்டிஸ் கர்வத்துடன் கிட்டு(கட்டியிருப்பதால்) வேண்டாமே வலிக்குது,

    //அதைப் புலிகள் நிறுத்தினாலென்ன பூனைகள் நிறுத்தினாலென்ன எனது நன்றி அவர்களுக்கு உண்டு.//rohan
    இதில் எனக்கும் உடன்பாடுதான், ஆனால்;;;;;;;;;;;;;

    Reply
  • நந்தா
    நந்தா

    ஆடு வெட்டுவதை நிறுத்தியதுக்கு நன்றியாம். ஆனால் ஐயரைக் கொன்றதுக்கு “ஒன்றுமில்லையாம்”. புலிகளின் அகராதியில் ஆட்டை விட ஐயர் கேவலம் என்பதை செயலில் காட்டியுள்ளனர். பிறகென்ன இந்து சமயம் உங்களுக்கெல்லாம் வேண்டிக் கிடக்குது?

    Reply
  • Danu
    Danu

    கோயிலில் நடத்தினால் என்ன இறைச்சிக் கடையிலோ வீட்டிலோ நடத்தினால் என்ன அது மிருகவதைதான் என்றே நான் கூறுகிறேன். அதற்காக ஜரொப்பாவில் அதை அழகாகச் செய்கிறாங்கள் என்றகதை வேண்டாம்.

    //இந்து கோவில்களில் நடக்கும் வேள்வி என்பது மக்கள் வயது பால் வேறுபாடின்றி சுற்றிநிற்க ஆடு கோழிகளின் கழுத்தை இரத்தம் பிறீட அறுப்பதை கண்டிக்கின்றனர்… //
    1986ல் தெருத்தெருவாய் நடத்திய வேள்வியை யாரும் மறக்கமாட்மாhகள்.
    அதுமட்டுமல்ல அங்கவீனர்களாக தப்பித்தவர்கள் பலர் இன்னமும் வாழ்கிறார்கள்

    Reply
  • raja
    raja

    புலிகள் ஆடுவெட்டுவதை நிறுத்தி இளைஞர்களை பலிகடாக்கினார்கள். பூமியில் நரபலியிடவேண்டும் என்பது இந்துக்களின் ஐதீகம். நீங்கள் வாழும் நாடுகளில் பண்டி ஆடு வியாபாரத்துடன் சேர்த்து பூமிக்கு ரத்தம் கொடுக்கிறார்கள். நல்ல காலம் பல்லி நகர்ந்து மறுகரைவந்தது இல்லாவிட்டால் கனவிடயம் அறிந்திருக்கமுடியாது.

    Reply
  • rohan
    rohan

    //பிறகென்ன இந்து சமயம் உங்களுக்கெல்லாம் வேண்டிக் கிடக்குது?//நந்தா
    இந்து சமயத்தில் மிருகவதை தவறு என்று எங்கே சொல்லியிருக்கிறார்கள்?

    //பூமியில் நரபலியிடவேண்டும் என்பது இந்துக்களின் ஐதீகம். //ராஜா
    இது நியாயமான பேச்சு!

    எனது வாதம் மாமிசம் புசிப்பது பற்றியது அல்ல. கோயில் புனிதமானதா இருக்க வேண்டும் என்றால் வரிசை வரிசையாக மிருகங்கள் கொண்டு செல்லப்பட்டு கொன்று செல்லப்படுவது தப்பு என்பதே.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    ஈழவிடுதலை போராட்டம் பற்றி புலியெதிர்ப்பு மனநிலையுடையோர் ஏதாவது எழுத வெளிகிட்டால் அவர்களின் ஆரம்பம் பெரும்பாலும் ரசியா-லெனின் சீனா-மாவோ கியூபா-காஸ்ரோ வியட்னாம்-கொஸ்மின் மற்றும் தெ.ஆபிரிக்கா-மண்டேலா. மக்களை திரட்டினர் புரட்சிசெய்தனர் விடுதலை/அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினர் என்ற சாரப்படியிருக்கும். சரி புலிகளின் பெரும்பாலான குறி எதிரியின் படைகட்டமைப்பை சிதைத்தல் என்றுதானே இருந்தது அது பெருந்தவறோ என எண்ணத்தோன்றியது. அப்போது சில கேள்விகளும் என்னில் எழுந்தது. அதற்கு பதில் தருவீர்களா!

    1)ரசியாவில் லெனின் பெரும்புரட்சி செய்து சோவியத்யூனியன் எனும் பெரும் கொம்முனிச கட்டமைப்பை நிறுவினார். அதே சோவியத்யூனியன் உதிரவும் துண்டுதுண்டாய் சிதறவும் ஐனநாயக முதலாளித்துவம் வர யார் போராடியது/ புரட்சிசெய்தது.
    2)வியட்னாமில் அமெரிக்க ஆக்கிரமிப்புபடையை அகற்ற 15 இலட்சம் வியட்னாமிய உயிர்களை பலிகொடுத்து கொம்முனிசவியட்னாமை கொஸ்மின் உருவாக்கினார். ஆண்டுகள் 45 கழியவில்லை “அமெரிக்கா நீ வராய் எனதுநாட்டில் படைத்தளமொன்று போடாய்” என வியட்னாம் இன்று சிந்துபாடுவதற்கு யார் போராடியது/புரட்சிசெய்தது.
    3)ஐயோ ஐயோ எங்களை பிரித்துவிடாதீர்கள் என கதறக்கதற சிங்கபூருக்கு மலேசியா கட்டாய சுதந்திரம்தானே கொடுத்தது. அங்கு போராட்டமுமில்லை புரட்சியும் இல்லாதுதானே சுதந்திரம் கிடைத்தது. எதனால்?
    4)இலங்கை மலேசியா இந்தோனேசியா அவுஸ்திரேலியா………. நாடுகள் சுதந்திரம் கேட்டு போராடவுமில்லை புரட்சி செய்யவுமில்லை ஆனால் சுதந்திரம் கிடைத்ததே! எப்படி?
    போராட்டத்தின் வெற்றி/தோல்வி நாடுகளின் விடுதலை மற்றும் அரசியல் மாற்றமென்பது இப்படிதான் என ஒரு வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. அது அந்தந்த நேரங்களிலிருந்த உலக ஒழுங்கு நாடுகளிடையே இருந்த உறவுகள் மற்றும் பகைகள். பொருளாதார வளர்ச்சி/தேக்கம் ……. போன்ற இன்னோரின்ன காரணிகளே தீர்மானிக்குது. அந்த தலைவர் மாதிரிதான் இருக்கணும். இந்தநாடு மாதிரிதான் போராடணும்… போன்ற கண்மூடிதனமான அறிவுரைகள். ஒவ்வொரு போராட்டமும் தனிதன்மையான சிக்கல் இடையூறுகள் உடையவை என்பதை கணக்கில் எடுக்காத விமர்சனங்கள். அடுத்தவரை கிண்டலடிக்கதான் உதவுமே தவிர. அது உண்மையாகிவிடாது.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //கோயிலில் நடத்தினால் என்ன இறைச்சிக் கடையிலோ வீட்டிலோ நடத்தினால் என்ன அது மிருகவதைதான் என்றே நான் கூறுகிறேன். அதற்காக ஜரொப்பாவில் அதை அழகாகச் செய்கிறாங்கள் என்றகதை வேண்டாம்.//
    “நான் கூறுகிறேன்” என்பது உங்கள் கருத்து சுதந்திரம். ஆனால் மிருகவதை சட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்ட நாட்டில் பொது இடத்தில் ஆட்டை வெட்டுவது தண்டணைக்குரிய குற்றம்.

    Reply
  • jeyarajah
    jeyarajah

    1986ல் நடந்தற்கு 2009 லா எதிர் விளைவு. நல்ல லோஜிக்.(தோஸ்து)
    திரும்பவும் படியுங்கள். 1987ல் ஏன் இந்தியா வந்தது. இந்த ஒரு வருடத்திற்குள் மற்றைய இயக்கங்களை அழித்து சாதனை படைக்க வெளிக்கிட்டவர்கள் அன்று இருந்த நிலைமைதான். இந்தியா வந்திருக்காவிட்டால் அப்பவே ஒரு முள்ளிவாய்க்கால் அமைந்திருக்கும்.

    //தமது சுயநலம் பேண. ஆண்டுகள் 23 ஆனாலும் ஏன் என உங்களிற்கு சுயமாக அறியமுடியவில்லையா! சந்திரசேகர் என்பவரின் சுயஓப்புதல் கருத்து அண்மைகால தேசம்நெற் பதிவிலிருக்கு./
    ஏன் இந்தியா பயிற்சியும் ஆயுதமும் கொடுத்தது என்பது சகலருக்கும் தெரியும் இதற்குப் போய் ஒப்புதல் தெரிய வேண்டும் என்பதல்ல. இதற்கு 23 வருடங்களா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //நல்ல காலம் பல்லி நகர்ந்து மறுகரைவந்தது இல்லாவிட்டால் கனவிடயம் அறிந்திருக்கமுடியாது//
    போற போக்கிலை பல்லி கோவில் மேளம்போல் ஆகிவிடும் போல் உள்ளது; ஆள் ஆளுக்கு உங்க ரசனைக்கு ஏற்றா போல் வாசிக்கிறியள், இருந்தாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சியை தந்தால் அதுகூட பல்லிக்கு மகிழ்ச்சிதான்;

    //கோயில் புனிதமானதா இருக்க வேண்டும் என்றால் வரிசை வரிசையாக மிருகங்கள் கொண்டு செல்லப்பட்டு கொன்று செல்லப்படுவது தப்பு என்பதே.//
    உன்மைதான் அதுக்காக மனிதனை வெட்டியவன் மாட்டை வெட்டியவனை நாட்டாணமை பண்ணலாமா??

    வர வர பல்லிக்கு பின்னோட்டம் விடவே பயமாக உள்ளது, இருப்பினும் பல்லி தன் கடமையை செய்யும்;

    Reply
  • raja
    raja

    /கோயிலில் நடத்தினால் என்ன இறைச்சிக் கடையிலோ வீட்டிலோ நடத்தினால் என்ன அது மிருகவதைதான் என்றே நான் கூறுகிறேன். அதற்காக ஜரொப்பாவில் அதை அழகாகச்க செய்கிறாங்கள் என்றகதை வேண்டாம் //
    ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் மனிதவதை செய்கிறான் நீங்கள் மிருகவதை குற்றம் என்கிறீர் உங்கள் தலைவன் 27வருடமாக தமிழ்வதை செய்தார் தெரியுமா தமிழன் சுமக்கமுடியாத சுமையைதலையில் சுமக்க சொன்னார்.
    /கோயில் புனிதமானதா இருக்க வேண்டும் என்றால் வரிசை வரிசையாக மிருகங்கள் கொண்டு செல்லப்பட்டு கொன்று செல்லப்படுவது தப்பு என்பதே//தோஸ்து
    கண்ணப்பர் கடவுளிற்கு இறைச்சியை படைத்துதான் முத்தி ஏய்தினார்.

    Reply
  • நந்தா
    நந்தா

    //பூமியில் நரபலியிடவேண்டும் என்பது இந்துக்களின் ஐதீகம்//raja
    அப்படியா? எந்த இந்துக் கோட்பாடு அல்லது வேத ஆகமம் “நரபலியை” வற்புறுத்துகிறது?

    நரபலி வேண்டும் என்று இந்துக்களுக்கு ஐதீகமா? புரியவில்லை! புலிகள் தமிழர்களைக் கொன்றது “நரபலி” என்ற அடிப்படையில்த்தான் என்ற விளக்கம் விரைவில் வரப்போவதின் அறிவித்தலா?

    Reply
  • vanavil
    vanavil

    வீக்கிலீக்சின் கருணா – கோட்டாபய உறவு ……..

    http://athirvu.com/phpnews/images/22122010-1.jpg

    Reply