பிலிப்பைன்ஸ் சமாதான விருதினைப் பெற்றமைக்காக யாழ்.படைகளின் தளபதிக்கு யாழ்ப்பாணத்தில் கெளரவிப்பு நிகழ்வு.

Mahinda_Hathurusinghe_Major_Generalபிலிப்பைன்ஸ் நாட்டின் சமாதானத்திற்கான ‘குஷி’ விருதினைப் பெற்றுள்ள யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை கெளரவிற்கும் நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை பாதுகாவலன் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க சங்கானையில் இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்திற்கு படையினர் துணைபோனமைக்காக படையினர் சார்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமலிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
முப்பது வருடகால யுத்தம் முடிவிற்கு வந்து சகல மக்களும் ஒன்றிணைந்து வாழும் சூழல் உருவாகியுள்ளது இந்நிலை தொடர சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நல்லைஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள், யாழ்.ஆயர் வண.தோமஸ் செளந்தரநாயகம், தென்னிந்திய திருச்சபை போராயர் வண. டானியல் தியாகராசா ஆகிய மதத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Related News:

யாழ். இராணுவத் தளபதிக்கு சமாதானத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *