பளைக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்களை விரைவில் மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை.

landmines.jpgபளைப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து இன்னமும் நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களை விரைவில் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவைச் சேர்ந்த கச்சார்வெளி, அல்லிப்பளை, அரசர்கேணி ஆகிய கிராமங்களைச் சோந்த மக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 25 குடும்பங்கள் தற்போது வவுனியா முகாம்களில் தங்கியுள்ளனர். அங்கு தொழில் வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில் நீண்டகாலம் வாழ்ந்து வருதாக அவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குறித்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அதிகளவில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது அகற்றப்பட்ட வருவதாகவும் இதன் காரணமாகவே இப்பகுதி மக்களை மீள்குடியர்த்துவதில் தாமதமேற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *