இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளில் தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டுள்ள நிலையில், இப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட முஸ்லிம் கட்சிகளையும் மலையகத்தமிழ் கட்சிகளையும் இணைத்துக் கொள்வது குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்கும் என தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை குறித்த பேச்சுக்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தது. ஏற்கனவே தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஆராய்வதற்காக இரு கட்சிகளிலுமிருந்து தலா மூன்று பேரை நியமித்துள்ள நிலையில், தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளவுள்ள அடுத்த சந்திப்பின் போது குறிப்பிட்ட ஏனைய கட்சிகளை இதில் இணைத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Mohamed Shareef Asees
It is a good start. But i dont believe on Sivajilingam.
Mohamed Shareef Asees