இலங்கை பாராளுமன்ற தேர்தல் சில முக்கிய விடயங்கள் !

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நிறைவுபெற்றுள்ளது.

காலை 07.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 05.00 மணிக்கு நிறைவடைந்ததோடு, தேர்தல் பெரும்பாலும் அமைதியாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 12,985 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு நடைபெற்றது, 16,263,885 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் சட்டங்களை மீறிய 520 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  • நாளை காலை நாளை (06) வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
  • காலை 07.00 மணிக்கும், 08.00 மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
  • பொதுத் தேர்தலின் முடிவுகள் பிற்பகல் 2.30 மணியளவில் வெளியாகும்.  
  • தேர்தலின் இறுதி முடிவு ஓகஸ்ட் 06 வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் வெளியிடப்படவுள்ளது.
  • விருப்பு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஓகஸ்ட் 07 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் வெளியிடப்படும்.
  • அனைத்து முடிவுகளும் ஓகஸ்ட் 08 சனிக்கிழமையன்று வர்த்தமானியில் வெளியிடப்படும்.
  • ஓகஸ்ட் 09 ஞாயிற்றுக்கிழமைக்குள் தேசிய பட்டியல்கள் தொடர்பான அறிவித்தல் வெளியாகும்.
  • பொதுத் தேர்தல்கள் 2020 தொடர்பான அனைத்து வர்த்தமானிகளும் ஓகஸ்ட் 10 திங்கட்கிழமைக்குள் வர்த்தமானியில் வெளியாகும்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *