முள்ளிவாய்க்காலில் இருந்து தன்னுடைய பாராளுமன்ற பயணத்தை ஆரம்பிக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன் !

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் சற்று முன்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தி தன்னுடைய பாராளுமன்ற அரசியலை ஆரம்பித்துளார்.

இலங்கையில்  நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் 2009இல் உயிர் நீத்த இடமாகிய முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவு தூபியில் சற்று முன்னர் அஞ்சலி நிகழ்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்ததக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *