விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் – அமெரிக்கா யோசனை

kili-04.jpg
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், அவர்களது கோரிக்கை தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் என அமெரிக்கா யோசனை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா இவ்வாறு யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கார்டன் டூகிட் கூறுகையில், இலங்கை அரசு நேற்று ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றார் டூகிட்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *