மீளக்குடியேறாதோரின் காணியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நாகர் கோவில் தெற்கு, வலிக்கண்டி மீள்குடியேற்றத் திட்டத்தில் இதுவரை மீளக் குடியேறாதவர்களின் விபரங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, காணியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு உதவி அரச அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அறிவித்துள்ளதாவது;

வலிக்கண்டி மீள்குடியேற்றத் திட்டத்தில் (நாகர்கோவில் தெற்கு) 120 குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு தீர்மாணிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன. இவற்றில் 72 குடும்பங்கள் குடியேறியுள்ளன. மீதி 48 குடும்பங்களும் இதுவரை குடியேறவில்லை. இவ்வாறு குடியேறாதவர்களை உடனடியாக குடியேறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். குடியேறத்தவறுபவர்களின் வீடுகள் சம்பந்தமாக மீள்பரிசீலனை செய்யப்பட்டு காணி அபிவிருத்திச் சட்டத்தின் 106 ஆம் பிரிவின் கீழ் இவர்களுக்கான காணி ஒதுக்கீடு இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவிடயமாக, மேலதிக விண்ணப்பங்கள் எவையும் பரிசீலனை செய்யப்படமாட்டாதெனவும் உதவி அரச அதிபர் அறிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *