பொங்கல் பரிசாக யாழ். மாவட்டத்துக்கு 24 மணிநேர மின் விநியோகம்

power1.jpgயாழ். மாவட்டத்துக்கு பொங்கல் பரிசாக 24 மணித்தியால மின்சார விநியோகத்தை மின் சக்தி வள அமைச்சு வழங்கவுள்ளது. தற்போது சீன நிறுவனத்தினால் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “நோத்பவர்’ மின் உற்பத்தி நிலையம் தனது செயல்பாட்டை பூரணப்படுத்தியிருப்பதால் அடுத்த இருவாரங்களுக்குள் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிறுவனம் தினமும் 35 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் திறன் கொண்டுள்ளதால், குடாநாடு முழுவதும் நாள் முழுவதும் தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமென யாழ். மாவட்ட மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குடாநாட்டுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த வருடத்துடன் முடிவடைவதால், புதிய சீன நிறுவனமே மின் உற்பத்தியை தொடரமுடியும். இதேவேளை வடபகுதிக்கு லக்ஸபான மின்சார பாதையை விஸ்தரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அரச கட்டுப்பாட்டுப் பகுதியாகவுள்ள மாங்குளம் வரையான விஸ்தரிப்பு வேலைகள் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ளன.

Show More
Leave a Reply to sanath Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • sanath
    sanath

    மின்சாரம் கூட பரிசாக குடுக்குமளவிக்கு இலங்கை நிலவரம் இருக்கிறது.

    Reply
  • Logan
    Logan

    எதுக்கெடுத்தாலும் நொட்டை சொல்லும் வழக்கம் போகாது!
    500 கிராம் அரிசிப் பொட்டலம் பொங்கல் பாpசாகக் கொடுக்கலாம் மின்சாரமென்ன குறைவோ?
    35 மெகாவாட் தினமும் உற்பத்தி! இதன் எதிர்காலப் பயன்பாடு விவசாயத்திலும் சிறுகைத் தொழிலிலும் ஏன் தொழிற்சாலையிலும் இடம்பெறலாம்!
    எதுவும் நல்லதென்றால் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

    Reply