அமெ ரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்ரேலின் நண்பரென்றும் காஸா மீதான தாக்குதலை நிறுத்த முயற்சிக்கமாட்டாரெனவும் அல்-கைதாவின் இரண்டாம் மட்டத்தலைவர் அய்மன் அல்ஸவாஹிரி தெரிவித்துள்ளார். இவரின் உரையடங்கிய ஒலிநாடா அல் கைதாவின் இணையத்தளத்தில் வெளியானது. காஸா மீதான தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அல்-கைதாவால் வெளியிடப்பட்ட முதல் ஒலி நாடா இதுவாகும்.
அல்-கைதாவின் இரண்டாம் மட்டத் தலைவர் அய்மன் ஸவாஹிரி இதில் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த ஒலி நாடாவில் தெரிவிக்கப்பட்டதாவது :- பராக் ஒபாமா அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றுவார். முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பெல்லாம் போலியானது. ஒபாமா எப்போதும் இஸ்ரேலின் நண்பர். காஸா தாக்குதல் அவர் இஸ்ரேலுக்குக் வழங்கியுள்ள பரிசு.
காஸா மக்களையும், குழந்தைகளையும் இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற அவர் முன்வரமாட்டார். இஹ்வால் முஸ்லிம்களை அடக்கியாள நினைக்கும் எகிப்திய ஜனாதிபதி முஸ்லிம்களின் ஒட்டு மொத்த துரோகி இஸ்ரேலின் கொலைகளுக்கான விளைவுகளை டெல்அவிவ் விரைவில் எதிர்கொள்ளுமெனவும் அவ்வுரை யிலே ஸவாஹிரி கூறியுள்ளார். அரபு ஆட்சியாளர்களையும் அல்-கைதா சாடியுள்ளது. பலஸ்தீனச் சிறுவர்கள், குழந்தைகள் முதியோர்கள் கொல்லப்படுவதானது உலகெங்குமுள்ள யூதர்களைக் கொலை செய்யப்படவுள்ளதை நியாயப்படுத்தியுள்ளதாக காஸாவை ஆளும் ஹமாஸ் தெரிவித்துள்ளதும் தெரிந்தது.