மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கென 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் திணைக்கள வட் டாரங்கள் தெரிவித்தன. இரண்டு மாகாணங்களிலுமுள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களினது தெரிவத்தாட்சி அதிகாரிகளிடமே இவ்விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தகுதியுள்ளோர் பெப்ரவரி 02ஆம் 03ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும். இதற்கான வாக்குச்சீட்டுக்கள் இம் மாதம் 21ஆம் திகதி கிடைக்கும் வகையில் ஐந்து மாவட்டங்களது தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் கூறின.