குறைந்த வருமானம் உடைய 92 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க யுனிசெப் தீர்மானம் !

கொரோனா தடுப்பூசி அனைவக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோகத்தை முன்னிலை எடுத்து செய்வதாக, யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசிகளை வாங்கும் அமைப்பு யுனிசெஃப் ஆகும். ஆண்டுதோறும் தட்டம்மை, போலியோ உள்ளிட்ட நோய்களின் தடுப்பூசியை, 200 கோடிக்கும் அதிகமாக வாங்கி, யுனிசெஃப் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கிறது.

தற்போது Pan American Health Organization என்னும் அமெரிக்க சுகாதார அமைப்புடன் இணைந்து, குறைந்த வருமானம் உடைய 92 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கவுள்ளதாக, யுனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் யுனிசெஃப் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *