”சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும்” – பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து , கொரோனா பரவலைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் 6 பேருக்கு மேல் கூடினால்  அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அங்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளைக்‍ கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். வரும் 14-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நண்பர்கள், குடும்ப சந்திப்புகளில் 6 பேருக்கு மேல் கூடினால் தொடக்கத்தில் 9 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், அடுத்தடுத்து இந்த விதிகளை மீறினால் 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், அலுவலகங்கள், கொரோனா விழிப்புணர்வுடன் நடக்கும் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *