“13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் ” – பாராளுமன்றில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா !

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

மாகாண சபை முறைமையானது எமக்குக் கிடைத்திருந்த காலந்தொட்டு, அதனை எமது மக்கள் நலன் சார்ந்து செயற்படுத்தியிருந்தால், இன்று எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்தவரையில் தீர்க்கப்பட்டிருக்கும் என்பதை நான் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றேன்.

எனினும், குறித்த அதிகாரத்தைப் பெற்றவர்களும், அபகரித்துக் கொண்டவர்களும் அதனை ஒழுங்குற செயற்படுத்தியிருக்கவில்லை.

மக்களது ஆணையை மதித்து இந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் குறைபாடுகள், அல்லது சேர்க்கைகள் இருப்பின் அதுகுறித்து ஆராய்ந்து அவற்றை சரி செய்து கொள்வதற்கு கால அவகாசம் இருக்கின்றது என்பதால், இது குறித்து எவரும் வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *