போர்ச் சூழலில் காயமடையும் பொது மக்களுக்கு சேவைகளை வழங்க தாம் தொடர்ந்தும் வன்னியில் இராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் கடமையாற்றவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வன்னியில் கடமையாற்றும் ஒரேயொரு சர்வதேச அமைப்பு இதுவாகும்.
இராணுவக் கட்டுப்பாடற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் எமது பிரதிநிதிகள் தங்கியுள்ளனர். அங்குள்ள நிலைமை குறித்து நாளாந்தம் அறிக்கைகள் கிடைக்கின்றன. போரில் சிக்குண்டு காயமடையும் பொதுமக்களுடைய விடயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என அவர் தெரிவித்தார்.
அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சூனிய பிரதேசமான உடையார்கட்டு பகுதிக்குள் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. அங்கு சுமார் நூறு பணியாளர்கள் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.