ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஐயாயிரம் முஸ்லிம்கள் எதிர்வரும் 31ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்திக்கவுள்ளனர்.
கண்டி மாவட்டத்திலிருந்து இம்முறை மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு முன்வந்திருக்கும் முஸ்லிம்களை ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தும் வகையிலேயே மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.