வடக்கில் 2997 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம் !

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் இன்றைய முதல் நாளில் 2 ஆயிரத்து 997 சேவையாளர்கள் டோஸ் பெற்றுள்ளனர். இது 30 சதவீத்ததினர் ஆகும்.என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில்  9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர். மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 997 பேர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும்   ஆயிரத்து 586 பேரும் கிளிநொச்சியில் 290 பேரும் மன்னாரில் 448 பேரும் வவுனியாவில் 360 பேரும் முல்லைத்தீவில் 313 பேரும் இன்றுகொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்.
இரண்டாவது நாள் தடுப்பூசி மருந்து வழங்கல் நாளை முன்னெடுக்கப்படும் ” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *