பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.