கொரோனா வைரஸின் தாக்கத்திற்குட்பட்டு இறந்த முஸ்லிம் மக்களின் ஜனாசா நல்லடக்கத்திற்கு அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்த காலத்தில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுடைய சடலங்களை புதைக்க அனுமதி வழங்குமாறு முஸ்லீம்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசு அதனை மறுத்தே வந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.