விமானப்படையினரால் 3 லட்சம் ரூபா பெறுமதியான நூலகம் கேப்பாபிலவில் திறப்பு! 

விமானப்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, முல்லைத்தீவில் இன்று (திங்கட்கிழமை) நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, கேப்பாப்புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான நூலகம் மாணவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் குரூப் கெப்டன் ஏ.டி.ஆர்.லியன ஆராச்சி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நூலக கட்டடம் திறந்துவைக்கப்பட்டதோடு, மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *