அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி !

யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் “சுகாதாரத் தொண்டர்களை ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கலாம் எனும் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அங்கஜனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது போராட்டத்தைப் பல்வேறு இன்னல்கள், அசௌகரியங்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிரந்தர நியமனம் அற்ற சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பில் பல்வேறு உயர்தரப்பினருடன் கலந்துரையாடி வந்த யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் நேற்றைய தினம் (01.04.2021) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் கலந்துரையாடலில் ஜனாதிபதிக்கு, சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுபவர்களுடன் நிரந்தர நியமனம் தொடர்பில் எடுத்துரைத்து இந்தத் தொண்டர்களுக்கான தீர்வை தருமாறு கேட்டிருந்தார்.

இந்த விடயத்தை பற்றி கேட்டறிந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, புதிய அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வரும் “சுபீட்சத்தின் நோக்கு” செயற்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்க்கு அமைய சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதாக உறுதியளித்து ஜனாதிபதியின் செயலாளர் , கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவுக்கு இந்தப் பணிப்பை வழங்கினார்.

அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயையும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதனையும் சுகாதார தொண்டர்களின் சுகாதார உதவியாளர் நிரந்தர நியமனம் தொடர்பில் கூறினார்கள்.

இச்சமயம் இது தொடர்பில் தாம் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து சுகாதார தொண்டர்களின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்திப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்வதாக அமைச்சர் மற்றும் அங்கஜன் ஆகியோர் உறுதியளித்திருந்தனர்.

அதற்கிணங்க அந்தச் சந்திப்பு நடைபெற்று தற்போது ஜனதிபதியுடன் கலந்துரையாடி இந்த பிரச்சனைக்கான தீர்வும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *