புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சியொன்று பெப்ரவரி 21, இன்று சறெயில் இடம்பெறவுள்ளது. கடந்த ஆண்டு முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 3வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. காட்சி விபரங்கள் கீழே.
புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு வகைப்பட்ட திரைப் படங்களை அறிமுகப்படுத்தி அவற்றில் அவர்களை ஈடுபட வைப்பதே இக்காட்சிப் படுத்தல்களின் நோக்கமாக உள்ளது. மேலும் இவ்வகையான காட்சிப் படுத்தல்களின் போது திரைப்படங்களை இயக்கியவர்கள் அவற்றில் ஈடுபடுபவர்களும் கலந்துகொள்ளும் போது ஆரோக்கியமான கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இக்காட்சியின் போது ஆர் புதியவனின் ‘Through the Window’, ஆர் பிரதீபனின் ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ ஆகிய குறம்திரைப்படங்கள் காண்பிக்கப்பட இருக்கிறது. ஆர் பிரதீபனுடைய குறும்திரைப்படம் பேர்ளின் படவிழாவில் திரையடப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆர் புதியவனின் ‘Through the Window’ ஒரு பரிசோதனைச் சினிமா. சமூகம் எதிர் கொள்கின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை 12 நிமிடங்களுக்குள் சொல்லிச் சென்றுள்ளார். ஒவ்வொருவரும் தமது வீட்டு யன்னலினூடாகப் பார்க்கின்ற போது மற்றுமொருவரது பிரச்சினையைக் காண்கின்றனர். வழமையான கதைசொல்லும் போர்க்கில் இருந்து விடுபட்டு ஒரு பரிசோதைனையை முயற்சித்து இருக்கிறார்.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெறும் யுத்தத்தின் வடுக்களை குறியீடுகளுடாகக் கொண்டு ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ தயாரிக்கப்பட்டு உள்ளது. 12 நிமிடக் குறும்படம் பெரும்பாலும் சினிமா மொழியைக் கொண்டு இயக்கப்பட்டு உள்ளது. எக்ஸில் வெளியீடாக வந்துள்ள இக்குறும்படம் தமிழ் குறும்பட சூழலுக்கு ஒரு நேர்த்தாக்கத்தை கொடுக்கும் எனலாம்.
தொடர்ச்சியாக இந்நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் மண்டபம் மற்றும் உணவு போன்ற செலவுகளுக்கு இரு பவுண்கள் கட்டணமாக அறவிடப்படுகிறது. பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். திரைப்படக் காட்சிகளின் முடிவில் இராப்போசனமும் பரிமாறப்படுகிறது.
காட்சி விபரங்கள்:
6.30 pm on 21st February 2009.
The Corner house
116 Douglas Road
Surbiton
Surrey
KT6 7SB
Related Articles:
மரணித்த இரண்டு முற்றத்து மாமரங்கள் : யமுனா ராஜேந்திரன்
பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் புலம்பெயர்ந்தவரின் குறும்படம் : த ஜெயபாலன்