மே தினம் – உழைக்கும் கரங்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள் !

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம். உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாறின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றும் கூறினார் ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த ஆசான் கார்ல் மார்க்ஸ்.

 

மே தினம்: உழைப்பாளர்களின் சிறப்பைப் பற்றி சனைச்சர பகவான் கூறும் ஜோதிட  ரகசியங்கள்!- Dinamani

கார்ள்ல்மார்க்ஸ் யுகம முடிந்து  42 ஆண்டுகள் முடிவதற்குள் , உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது. தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை உணர்ந்தனர். தாம், விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள், தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காககப் போராடினர்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் கைத்தொழில் துறை அசுர வேகமடைய ஆரமப்ித்த காலம் அது. தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. நாடுகளை தேடிய பயணம் சந்தைகளை தேடிய பயணமாக மாறியிருந்த காலம் அது. ஒரு பக்கமாக பொருள் விற்கும் சந்தைகளாக மாற்றப்பட்ட நாட்டு மக்கள் அடிமைப்பட்டு போக அதற்கான பொருட்களை உற்பத்தி செய்த மேலை நாட்டு தொழிற்சாலைகளின் தொழிலாளர்களும் அடிமைப்பட்டு போயினர். பல நாடுகளுக்கான உற்பத்தி செய்ய வேண்டி அவர்கள் மிருகங்கள் போல நடத்தப்பட்டனர். இந்நிலையிலேயே தொழிலாளர் எண்ணிக்கை கடுகதியில் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. தொழிலாளர் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற கோஷமும் வலுப்பெற ஆரம்பித்திருந்த காலம் இதுவாகும்..!

இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும். பிரான்சில் தொழிலாளர் இயக்கம் 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. இவ்வாறாக ஆரம்ப கால தொழிலாளர் உரிமை சார் போராட்டங்கள் யாவுமே முதலாளிவர்க்கத்தினால் அடக்கப்பட்டது. எனினும் அடக்குமுறைக்குள்ளாகவும் கோராட்டம் வெடித்தது.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம் தொழிலாளர் போராட்டத்தின் முக்கியமான மைல்கல் ஆகும். ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. இதனை முன்மாதிரியாக கொண்டு உலகின் அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் போராட்டங்கள் வேலை நேரக்குறைப்பை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

தீராத பக்கங்கள்: ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன்

தொழிலாளர் புரட்சிகளின் மகுடம் எனப்படும் ரஷ்யாவின் ஒக்டோபர்புரட்சி தொழிலாளர் உரிமைகளினை அரண் செய்த மிகப்பெரும் புரட்சி எனலாம். காலாதிகாலமாக ரஷ்யாவை ஆண்டு வந்த  சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கார்ள்மார்க்ஷின் வாதங்களை பின்பற்றி மிகச்சிறப்பாக தன்னை கட்டமைத்துக்கொண்ட புரட்சிதான் இந்த ரஷ்யப்புரட்சி.

ரஷ்யப்புரட்சியின் போது தொழிலாளர்கள் லெனின், ட்ரொஸ்கி ஆகிய கொமினியுச தலைவர்களால் இணைக்கப்பட்டு ஆயுதமேந்தி போராடி தங்களுடைய உரிமைகளை பெற்றுக்கொண்டனர். புரட்சி முடிவில் தொழிலாளர்களை மையப்படுத்திய சோவியத்ரஷ்யா உருவாக்கப்பட்டது. முதலாளிகளின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. முதலாளிகளிடம் இருந்து தொளிலாளர்களை பாதுகாக்கும் பொறுப்பை கொமினியுசம் என்ற போராட்டத்தின் பெயரில் ஆரம்பித்த பெருமை ரஷ்ய புரட்சியையே சாரும். மேலும் கொமினியுசம் கைத்தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கானது மட்டுமல்ல. விவசாயிகள்  உள்ளிட்ட எல்லா உழைக்கும் வர்க்கத்தினரும் தொழிலாளர்கள் தான் எனக்கூறிய புரட்சியும் இதுவே. இன்று வரை தொழிலாளர் உரிமைகளை மையப்படுத்திய கொமினியுச நாடுகளுக்கான தலைமைத்துவத்தை ரஷ்யா வகிப்பதற்கான பின்னணியை இந்தப்புரட்சியே வழங்கியது.

அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் வளர்சியடைந்த தன்மையானது பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு சிவனை கழுத்தையே அழுத்தியது போன்றதாகும். சுதந்திரமடைந்ததை தொடர்ந்து கைத்தொழில்துறை தொடர்பாக அதீத கவனம் செலுத்திய அமெரிக்கா முதலாளித்துவ கொள்கைகளை பின்பற்றும் நாடாக மாறியது.  மிக வேகமாக முன்னேற்றமடந்த அமெரிக்கா ஒரு கட்டத்துடன் முதலாளிகளுக்கான அரசாக மாறியது. தொழிலாளர்கள் அடக்கப்பட்டனர். அடக்குமுறைக்குள்ளாகினர். கறுப்பினத்தவர்கள் தொடர்பான அடக்குமுறைகள் தொழிலாளர் உரிமை மறுப்பு மூலமாக முன்னெடுக்கப்பட்டது.

மார்க்ஸ் 1867-ல் வெளியான மூலதனம் புத்தகத்தில் கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். “அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது.” எனக் குறிப்பிடுகின்றார்.

1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது. இவ்வாறாக நாம் கொண்டாடும் தொழிளார் தினம் பிறந்தது.

இந்த மேதினத்தின் நோக்கம் இன்றைய நாளில் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டதாகவும் ஒரு நாள் விடுமுறை நாளாகவும் மட்டுமே மாற்றம் கண்டுள்ளமை வருத்தத்துக்குரியது. இந்த நாள் மனத்தினின்று நினைவு கொள்ளப்பட வேண்டியுது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தின் மேல் நின்று தான் இந்த தினத்தையும் தொழிலாளர்கள் இந்த சலுகைகளையும் அனுபவிக்கின்றனர்  என்பதையும் மறந்து விடக்கூடாது.

இன்று வரை உலகின் ஏதோவொரு பகுதியில் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏதோவொரு வகையில் அந்த போராட்டங்களும் முதலாளித்துவத்தினால் அடக்கப்படும் போக்கு  தொடர்கிறது. அதற்காக எல்லாம் உழைக்கும் கரங்கள் அடங்கிப்போக கூடாது – அடக்கு முறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை நினைவுபடுத்தவே இந்த மேதினம் நினைவு கொள்ப்படுகின்றது. ஏற்றத்தாழ்வுகள் எவையும் அற்ற சமவுலகு ஒன்று தோன்றும் வரை தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

Celebrate the 125th Anniversary of Labor Day – A Brief Look at its History

உதிரத்தை உழைப்பாக்கி – உலகத்தை உயர்த்திடும் – உண்மை உழைப்பாளிகளுக்கு தேசத்தின் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *