இந்தியாவுக்கு , பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் !

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியாவுக்கு  கொண்டுவரப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

59 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 18 ரபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் மேலும் 3 விமானங்களை அந்நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. பிரான்சில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த 3 விமானங்களும் இன்று மாலைக்குள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *