“அரசியல் ரீதியில் செல்வாக்கு பெற்றவர்களிற்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை வழங்குகிறார்கள்.” என ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பொய்யான புள்ளிவிபரங்களை வெளியிடுவதன் மூலமும் பி.சி.ஆர் சோதனைகளை குறைப்பதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் உயிரிழப்புகளுடன் விளையாடுகின்றது எனவும் டிதெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைரசினால் உயிரிழக்கும் நோயாளிகளின் விபரங்களை வெளியிடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் விபரங்களை மாத்திரம் வெளியிடுகின்றோம் கொரோனாவைரசினால் தீவிரமடைந்த ஏனைய நோய்களினால் உயிரிழந்தவர்களின் விபரங்களை வெளியிடுவதில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.
சுகாதார பணியாளர்களிற்கு முன்னுரிமை வழங்காமல் அரசியல் ரீதியில் செல்வாக்கு பெற்றவர்களிற்கு இரண்டாவது டோஸினை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.