“செப்டெம்பர் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்வடையும்” – இலங்கைக்கு எச்சரிக்கை !

இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் செப்டெம்பர் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்வடையும் என வோஷிங்டனை தளமாக கொண்ட பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்றை மேற்கோள்காட்டி, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இந்த எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்கடன் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை குறித்து இலங்கை அவதானம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள மங்கள சமரவீர, குறித்த பல்கலைக்கழகமானது கொரோனா தொற்று தொடர்பான ஆழமான ஆய்வை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த வகையில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் தொற்று பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு இலங்கையும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்பிரகாரம் நாட்டில் ஏற்படக் கூடிய பேரழிவை தடுக்கும் வகையில் மொத்த சனத்தொகையில் குறைந்தது 70 வீதமான மக்களுக்கு தடுப்பூசி மருந்தை விரைவில் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரிய பேரழிவை தடுப்பதற்கான கால அவகாசம் தற்போதும் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இலங்கை துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *