“31ஆம் திகதி முதல் 10,000 ரூபாவிற்கு 10 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி வழங்கப்படும்.” – அமைச்சர் பந்துல குணவர்தன

“10,000 ரூபாவிற்கு 10 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி வழங்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாதம் 31ஆம் திகதி முதல் 10,000 ரூபாவிற்கு 10 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார “நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை தொடர்ந்து நாளாந்த வேதனத்திற்காக தொழிலில் ஈடுபடுவர்களுக்கும், வேறு வருமானம் இல்லாதவர்களுக்கும், அரச ஊழியர் அல்லாதவர்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *